பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 359

கடலை வற்றச்  செய்து - மீனினங்கள்  வெந்து கருகச்  செய்த
போதும் கடலுள் தவம் செய்வோர் அங்கம் வெந்திலர் என்றார்;
அதற்குக்   காரணம்    கூறுபவரைப்போல  "அவன்  அடிகள்
எண்ணலால்"  கனல்   என்னும்  பெயர்   கொண்ட  புனலில்
போயினார்' என்றார். பரமன் திருவடிகளையே  தியானித்திருந்த
அம்முனிவர்களை  அம்பின்  வெப்பம்  தாக்கவில்லை.  கனல்
புனலாயிற்று என்ற நயம், கருதி மகிழ்தற்குரியது.
 

(35)
 

6624.

தென் திசை, குட திசை, முதல திக்கு எலாம்

துன்றிய பெரும் புகைப் படலம் சுற்றலால்,

கன்றிய நிறத்தன கதிரவன் பரி

நின்றன; சென்றில; நெறியின் நீங்கின.
 

தென்திசை  குட  திசை முதல  திக்கெலாம்-  தெற்கு,
மேற்கு    முதலான    எல்லாத்    திசைகளிலும்;    துன்றிய
பெரும்புகைப்படலம்   சுற்றலால் 
-  நெருங்கிய   நிறைந்த
புகைப்படலம் சுற்றிச்  சூழ்தலால்; கதிரவன் பரி- சூரியனுடைய
தேரில்  பூட்டிய  குதிரைகள்;  கன்றிய  நிறத்தன- தமக்குரிய
பச்சை நிறம் நீங்கிக்  கன்றிய  நிறத்தை உடையனவாய்; நின்றன
சென்றில  நெறியின்  நீங்கின
-  வழி   தவறிப் போய் மேற்
கொண்டு செல்லாதனவாய் நின்றன.
 

படலம் -  திரட்சி. சூரியனுடைய  குதிரைகள் பச்சை  நிறம்
உடையவை என்பது   புராணக்  கொள்கை.  புகைப்படலத்தால்
எதையும்  பார்க்க இயலாமையின்  வழிதவறியும், மேலே செல்ல
இயலாமலும்  நின்றன  என்பதனை  'நின்றன சென்றில நெறியின்
நீங்கின' என்றார்! நின்றன  சென்றில - செல்ல இயலாது நின்றன
என்பது பொருள். நிறத்தன, சென்றில இவை முற்றெச்சம்; நின்றன
என்பது கொண்டு முடிந்தன.
 

(36)
 

6625.

 'பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர்

அறிந்திருந்து, அறிந்திலர் அனையர் ஆம்' என,

செறிந்த தம் பெடைகளைத் தேடி, தீக் கொள,

மறிந்தன, கரிந்தன-வானப் புள் எலாம்.
 

பிறிந்தவர்க்கு  உறு  துயர்- பிரிந்து வாழ்பவருக்கு உற்ற
துன்பம்; என்னும் பெற்றி- என்னும் தன்மையை; அறிந்திருந்து-
அத்துன்பத்தை   அறிந்திருந்தாலும்;  அறிந்திலர்   அனையர்
ஆம்என
-  அறியாதவரைப்  போன்றவராவர்;  செறிந்த  தம்
பெடைகளைத் தேடி
- நிறைந்த தம் பெண் பறவைகளைத் தேடி
வந்து; தீக்கொள