6631. | தா நெடுந் தீமைகள் உடைய தன்மையார், |
| மா நெடுங் கடலிடை மறைந்து வைகுவார், |
| தூ நெடுங் குருதி வேல் அவுணர், துஞ்சினார்; |
| மீன் நெடுங் கிரி என மிதந்து, வீங்கினார். |
| |
தூ நெடுங் குருதி வேல் அவுணர்- தசையோடு கூடிய, இரத்தம் தோய்ந்த நீண்ட வேலையுடைய அவுணர்கள்; தா நெடும் தீமைகள் உடைய தன்மையார்- துயர் தரும் பெருந்தீமைகள் கொண்ட பண்புடையவர் என்பதால்; மா நெடுங் கடலிடை மறைந்து வைகுவார்- பெரிய நீண்ட கடலிலே மறைந்து வாழ்கின்றவர்கள்; துஞ்சினார்- இராமபிரானுடைய அம்புகளின் வெம்மையால் உயிர்துறந்தார்கள்; மீ நெடுங்கிரியென- கடலின் மீது கிடந்த மலைகளைப் போல்; மிதந்து வீங்கினார்- மிதந்து உடல் வீங்கலாயினர். |
தூ - தசை. தசையும், இரத்தமும் கொண்ட வேலை 'தூ நெடுங்குருதிவேல்' என்றார். தா - வருத்தம், துயரம். மா நெடுங்கடல் - பெரியகடல். |
(43) |
6632. | தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய |
| பசும் பொனின் மானங்கள் உருகிப் பாய்ந்தன; |
| அசும்பு அற வறந்தன, வான ஆறு எலாம்; |
| விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே. |
| |
பசும் பொனின் மானங்கள்- (இராமபிரான் அம்புகளால் எங்கும் தீ எரிய) வானத்தில் செல்லும் பொன்னால் அமைந்த விமானங்கள் எல்லாம்; உருகிப் பாய்ந்தன- தீயின் வெப்பத்தால் உருகிப் பொழிந்தவை; தசும்பிடை விரிந்தன என்னும் தாரைய - நீர்க்குடங்கள் உடைந்தால் நீர்தாரைதாரையாய் ஒழுகுவது போல் இருந்தன; வான ஆறெலாம்- விண்ணுலகிலுள்ள ஆகாய கங்கை முதலான ஆறுகள்; அசும்பறவறந்தன - ஈரம் சிறிது மின்றி வறண்டு போயின; விசும்பிடை விளங்கிய-ஆகாயத்திலே ஒளிர்ந்த; மீனும் வெந்தவே- விண்மீன்களும் வெந்தன. |
மானம் - விமானம். தசும்பு - நீர்க்குடம். வானயாறு - ஆகாய கங்கை. அசும்பு. நீர்க்கசிவு (ஈரம்). மீன் - விண்மீன். |
(44) |
6633. | செறிவுறு செம்மைய, தீயை ஓம்புவ, |
| நெறியுறு செலவின, தவத்தின் நீண்டன, |