பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 365

கனைகடல் - ஒலிக்கும்  கடல். முருக்கும்  - எரியும்.  கா -
சோலை. பூதலம்.  நிலம். தூதன் -  இராம தூதனாகிய அனுமான்.
துணுக்கம். கொள்ளுதல்- திடுக்கிடுதல். இலங்கை நகரம் முழுதும்
பாழ்படத்தீயால் எரித்த  அனுமனது செயல் போல, அம்புகளால்
எழுந்த  தீயின்  செயலும்  இருப்பதால்   தூதன்  வந்தான் என,
இலங்கை  துணுக்கம்  கொண்டது என்றார்.  'இலங்கை' இடவாகு
பெயர்; இலங்கையில் வாழ்பவர்களை உணர்த்தும்.
  

(46)
 

6635.

அருக்கனில் ஒளி விடும் ஆடகக் கிரி,

 

உருக்கு என உருகின, உதிரம் தோய்ந்தன,

 

முருக்கு எனச் சிவந்தன; முரிய வெந்தன,

கரிக் குவை நிகர்த்தன, பவளக் காடு எலாம். 
 

அருக்கனில்  ஒளிவிடும்  ஆடகக்   கிரி -  சூரியனைப்
போல  ஒளிவீசும்   பொன்னிற  மலையான  திரிகூடமலையானது;
உருக்கு  என உருகின-  தீயால்  வெந்து, அரக்கு  உருக்குப்
போல உருகலாயின; உதிரம் தோய்ந்தன- அதனுடன் இரத்தமும்
தோய்ந்தமையால்;   முருக்  கெனச்  சிவந்தன - முருக்க மலர்
போலச்  சிவந்து  தோன்றின; பவளக் காடு  எலாம்-  கடலில்
உள்ள  பவளக்காடுகளெல்லாம்; முரிய  வெந்தன-  அழியும்படி
வெந்து போயினவாய்; கரிக்குவை நிகர்த்தன- கரிக்குவியல்களை
ஒத்திருந்தன.
 

அருக்கன்,  சூரியன். ஆடகக் கிரி  (இலங்கையின்  நடுவே
இருந்த திரிகூட மலை)  உருக்கு. அரக்குருக்கு (அரக்குக் கட்டி)
முருக்கு  -  முள்   முருங்கை   மலர்.  திரிகூட  மலை மூன்று
சிகரங்களைக்   கொண்டது    என்பதால்    'உருகின'   எனப்
பன்மையில்  கூறினார்.  'அருக்கனில்'  என்பதன் இல்,  உருக்கு
'என' என்பதன் 'என' 'முருக் கென'  என்பதன்  'என'  என்பன
உவமை  உருபுகளாகும்.  பவளக்காடு  -  இரு   பெயரொட்டுப்
பண்புத்தொகை.
 

(47)
 

6636.

பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்,

ஓர் இடத்து, உயிர் தரித்து, ஒதுங்ககிற்றில,

நீரிடைப் புகும்; அதின் நெருப்பு நன்று எனாப்

பாரிடைக் குதித்தன, பதைக்கும் மெய்யன.

 

பேருடைக்   கிரி   எனப்    பெருத்த    மீன்களும்-
பெருமையுடைய  'மலை' என்று  கூறத்தக்க   பெரிய  மீன்களும்;
ஓரிடத்து, உயிர் தரித்து ஒதுங்க கிற்றில- ஓரிடத்தில் இருந்து
உயிரைக் காப்பாற்றி ஒதுங்கி