பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 369

எரியும்  பெருந்தீயைப்  போல; கை  பரந்து ஓடி-   (அம்பின்
நெருப்பு) பக்கங்களிலெல்லாம் பரவிச் சென்று; உவரி நீ ரெலாம்
உற்றது
- கடல் நீரை அடைந்தது.
 

'அம்பின் நெருப்பு கடல் நீரை அடைந்தது. மன்னுயிர் யாவும்
வீடுபேறு  எய்தின' என்பது கருத்து. இராமபிரானால் அம்பெய்து
கொல்லப்பட்ட  எல்லா  உயிர்களும்  'வீடு  பெற்றன'  என்றார்.
வேணுவின்காடு  -  மூங்கில்காடு  மூங்கில்  காடு  தீப்பிடித்தால்
விரைவில் எங்கும் பரவுவது  இயல்பு  என்பதால்  'கனலின் கை
பரந்தோடி' என்றார்.
 

(54)
 

6643.

கால வான் கடுங் கணை சுற்றும் கவ்வலால்,

நீல வான் துகிலினை நீக்கி, பூ நிறக்

கோல வான் களி நெடுங் கூறை சுற்றினாள்

போல, மா நிலமகள் பொலிந்து தோன்றினாள்.
 

கால  வான் கடுங்கணை-  எமனுக்  கொப்பான விரையும்
அம்புகள்;  சுற்றும்  கவ்வலால்- கடல் முழுவதையும் கவ்விக்
கொண்டதால்; மா நிலமகள்-  பெரிய  நிலமாகிய  பூமித்தாய்;
நீலவான் துகிலினை  நீக்கி-  தான் உடுத்திருந்த நீலவானம்
போன்ற  ஆடையை  நீக்கிவிட்டு; பூ நிறக் கோல வான் களி
நெடுங்கூறை
-  பூ  வேலைப்பாடுகளோடு  கூடிய  செந்நிறமான
புத்தாடையை; சுற்றினாள்  போல-  தனது  உடம்பில்  சுற்றிக்
கொண்டவளைப் போல; பொலிந்து தோன்றினாள்- பொலிவுடன்
காணப்பட்டாள்.
 

நீலநிறமான  கடல் நீர் வறண்டு போய் எங்கும் ஒளி சிறந்த
சிவந்த  அம்புகளே காணப்படுவதால்  நிலமகள் நீல ஆடையை
நீக்கி ஒளி நிறைந்த செந்நிறமான ஆடையை அணிந்து பொலிந்து
தோன்றியது போலக் காணப்பட்டாள் என்று கூறியது நயம் துகில்
- பட்டாடை. கூறை - புத்தாடை. மணமகள் அணியும் ஆடையை
'கூறைப் புடவை' என்று கூறுவர். அது செந்நிறமுடையது.
 

(55)
 

6644.

கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக்

கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு,

உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால்,

மற்றொரு கடல் புக, வடவைத் தீஅரோ.
 

கற்றவர் கற்றவர் உணர்வு  காண்கிலாக்  கொற்றவன்-
கற்றறிந்தவர்களுக்குள் கற்றவராய் விளங்கும் மேலோர்களின்