பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 371

மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப, மீதுபோய்,

வானவர் மலர் அயன் உலகின் வைகினார்?
 

மேல்  நிமிர்ந்து  எழுகனல்  வெதுப்ப- கடலை விட்டு
மேலே  நிமிர்ந்து  எழுந்த  நெருப்பு  வெதுப்புவதால்  (பயந்து);
வானவர் மீதுபோய்- விண்ணுலகில்  வாழும்  தேவர்கள்  தாம்
வாழும் விண்ணுலகுக்கும்  மேலே  சென்று; மலரயன்  உலகின்
வைகினார்
- பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தில் தங்கலாயினர்
என்றால்; ஏனையர் என்ன வேறுலகில் ஈண்டினார்- தேவரினும்
ஏனையோராகிய மண்ணுலகில் வாழ்பவர்கள்; ஆனவர் செய்தன
அறைய வேண்டுமோ
- என்போர் செய்த செயல்களைச் சொல்ல
வேண்டுமோ?
 

ஈண்டினோர் -  நிறைந்திருப்பவர். வேறுலகு - தேவருலகினும்
வேறான மண்ணுலகு.
 

(58)
 

இராமன் சதுமுகன் கணை ஏவ-நிகழ்ந்த மாறுபாடுகள்
 

6647.

'இடுக்கு இனி எண்ணுவது என்னை? ஈண்டு இனி

முடுக்குவென் வருணனை' என்ன, மூண்டு எதிர்

தடுக்க அரும் வெகுளியான், சதுமுகன் படை

தொடுத்தனன்; அமரரும் துணுக்கம் எய்தினார்.
 

இடுக்கு இனி  எண்ணுவ தென்னை- இதனால் இனி வரப்
போகும்  துன்பங்களைப்  பற்றி  நினைப்பதால்  என்ன  பயன்?;
ஈண்டு இனி முடுக்குவென் வருணனை  என்ன-  வருணனை
இனி இங்கு விரைவில் வருமாறு செய்வேன் என்று; மூண்டு எதிர்
தடுக்கரும் வெகுளியான்
- பெருகி எழுகின்ற எதிர்த்து எவரும்
தடுக்க இயலாத வெகுளியை உடைய இராமன்; சதுமுகன்  படை
தொடுத்தனன்
- பிரமதேவனது   கணையான  (பிரம்மாஸ்திரத்தை
வில்லில் தொடுத்து விடத் தொடங்கினான்; அமரரும் துணுக்கம்
எய்தினார்
- அதைக்கண்டு தேவர்களும் திடுக்கிட்டார்கள்.
 

இடுக்கு - துன்பம். முடுக்குதல் - விரைதல்  மூண்டு - மேல்
மேல்  பெருகி  தடுக்க அரும் வெகுளி - தடுப்பதற்கரிய கோபம்.
சதுமுகன்படை ஆற்றல்  மிக்கது  என்பதால்  அதனால்  நேரும்
துன்பத்தை   நினைத்துப்   பயனென்ன?   வருணன்   விரைந்து
வரவேண்டுமானால்   சதுமுகன்   படையை   எய்வதே   தக்கது
என்பதால் 'இடுக்கினி   எண்ணுவதென்னை'  என்று  இராமபிரான்
கூறினான் எனலுமாம்.
 

(59)