6648. | மழைக் குலம் கதறின; வருணன் வாய் உலர்ந்து |
| அழைத்தனன்; உலகமும் அடைத்த, ஆறு எலாம்; |
| இழைத்தன நெடுந் திசை, யாதும் யார் இனிப் |
| பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால். |
| |
மழைக்குலம் கதறின- (இராமபிரான் சதுமுகன் கணையை ஏவ மேகக் கூட்டங்களெல்லாம் கதறலாயின; வருணன் வாய் உலர்ந்து அழைத்தனன்- வருணன் வாய் வறண்டு கதறினான்; உலகமும் ஆறெலாம் அடைத்த- உலகிலுள்ள ஆறுகளெல்லாம் தூர்ந்து போயின; யார் இனிப் பிழைப்பவர் - சதுமுகன் படைக்குத் தப்பி இனி யார் பிழைப்பார்கள்;என்பதோர் பெரும்பயத்தினால் - என்பதொரு பெரிய பயத்தால் இவ்வளவு நடந்தது; நெடுந்திசை இழைத்த- நீண்ட திசைகளெல்லாம் நுணுகிப் பொடியாயின; |
'பிழைப்பிலர்' என்பதைவிட 'பிழைப்பவர்' என்று பாடமே ஏற்றது மழைக்குலம் - மேகக் கூட்டம் உலர்ந்து - வறண்டு ஆறெலாம் - ஆறுகளெல்லாம் அடைத்த - தூர்ந்தன நெடுந்திசை - நீண்ட திசைகள் இழைத்த - தேய்ந்து நொறுங்கின. |
(60) |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
6649. | அண்ட மூலத்துக்கு அப்பால் அழியும் கொதித்தது; |
| ஏழு |
| தெண் திரைக் கடலின் செய்கை செப்பி என்? |
| தேவன் சென்னிப் |
| பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் |
| பதைத்தாள்; பார்ப்பான் |
| குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது |
| அன்றே. |
| |
அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது- அண்டத்தின் அடிப்பகுதியில் உள்ள பெரும் புறக் கடலும் கொதித்தது (என்றால்); ஏழு தெண்திரைக் கடலின் செய்கை செப்பிஎன்- உலகத்திலுள்ள தெளிந்த அலைகளையுடைய ஏழுகடல்களின் செய்கையைச் சொல்ல என்ன இருக்கிறது?; தேவன் சென்னிப் பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள்- சிவபிரானுடைய சென்னியில் வெகு காலமாக வீற்றிருந்த கங்கையாகிய பெண்ணும் பதைபதைத்தாள்; பார்ப்பான் |