குண்டிகை இருந்த நீரும்- அந்தணர் தலைவனான பிரமனது கமண்டலத்தில் இருந்த தண்ணீரும்; குளு குளு கொதித்தது அன்றே - குளு குளு வென ஒலித்துக் கொதிக்கலாயிற்று. |
அண்டமூலம் - அண்டங்களின் அடிப்பகுதி. ஆழி - பெரும்புறக் கடல் தேவன் - சிவபெருமான். பார்ப்பான் - பிரமன். குண்டிகை - கமண்டலம். 'குளு குளு' என்பது ஒலிக்குறிப்பு; 'அனுகரணம்' என்பர். 'அன்றே' அசை கங்கை நங்கை - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. |
(61) |
6650. | 'இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து, உலகு எலாம் |
| ஈன்று, மீளக் |
| கரக்கும் நாயகனைத் தானும் உணர்ந்திலன்; சீற்றம் |
| கண்டும், |
| வரக் கருதாது தாழ்த்த வருணனின் மாறு |
| கொண்டார் |
| அரக்கரே? அல்லர்' என்னா, அறிஞரும் அலக்கண் |
| உற்றார். |
| |
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து - (தனது திருவுள்ளத்திலே உயிர்களிடம்) இரக்கம் தோன்றிய காலத்திலே; உலகெலாம் ஈன்று மீளக் கரக்கும் நாயகனை- உலகங்கள் அனைத்தையும் படைத்து மறுபடியும் மறைத்துக் கொள்ளவல்ல உலக நாயகனை; தானும் உணர்ந்திலன்- நாம் அறிந்திருத்தல் போலத்தானும் அறியாதவனாயினான்; சீற்றம் கண்டும் வரக்கருதாது- இராமபிரானுடைய கோபத்தைப் பார்த்தபின்பும் வருவதற்கு நினைக்காமல்; தாழ்த்த வருணனின்-காலம் தாழ்த்த இந்த வருணனைவிடவும்; மாறு கொண்டார் அரக்கரே அல்லர் என்னா- இராமபிரானிடம் பகை கொண்ட அவர்கள் அரக்கர் அல்லர் (இந்த வருணன்தான் அரக்கன்) என்று கூறி; அறிஞரும் அலக்கண் உற்றார்- மற்றத்தேவர்கள் எல்லோரும் துன்பமுற்றார்கள். |
இறைவன் கருணையே உருவானவன் தனது கருணையால் உயிர்களைப் படைத்தும், கரந்தும், பின்பு மறைப்பதும் செய்யவல்லவன் திருமால். திருமாலின் அவதாரமான இராமபிரானை 'காக்கும் நாயகன்' என்றார். 'தானும்' உம்மை எச்சவும்மை. அலக்கண் - துன்பம் 'மாறு கொண்ட அரக்கரே நல்லர் என்பதும் ஒரு பாடம் வருணனைவிடப் 'பகை கொண்ட அரக்கர்களே நல்லவர்கள் என்பது அதன் பொருளாம். |
(62) |