கொள்ள அறியாத; நோக்கினன் வருணன் என்பான்- நோக்கினை உடையவனான வருணன் என்பவன்; அழுது அழிகண்ணன்- அழுது அழுது அழகிழந்த கண்களை உடையவனாகவும்; அன்பால் உருகிய நெஞ்சன்- இராமபிரானிடம் கொண்ட அன்பினால் உருகிய உள்ளத்தை உடையவனாகவும்; அஞ்சித் தொழுது ஏழு கையன்- அஞ்சி, தொழுதபடி மேலே உயர்த்தியகைகளை உடையவனாகவும்; வழுத்தும் சொல்லான்- இராமபிரானைப் போற்றிப் புகழும் சொற்களை உடையவனாகவும்; நொய்தின் தோன்றினன்- விரைந்து (இராமபிரானுக்கு எதிரிலே வந்து) தோன்றினான். |
எழுசுடர் - மேலும் மேலும் எழுகின்ற தீச்சுடர் படலை - திரள். எங்கும் புகை நிறைந்திருத்தலால் கண்களால் பார்க்க இயலவில்லை நொய்தல் - விரைதல். வருணன், நோக்கினன் கண்ணன், நெஞ்சன், கையன் சொல்லன் தோன்றினன் என இயையும். |
(64) |
6653. | 'நீ எனை நினைந்த தன்மை, நெடுங் கடல் முடிவில் |
| நின்றேன் |
| ஆயினேன் அறிந்திலேன்' என்று அண்ணலுக்கு |
| அயிர்ப்பு நீங்க, |
| காய் எரிப் படலை சூழ்ந்த கருங் கடல் |
| தரங்கத்தூடே, |
| தீயிடை நடப்பான் போல, செறி புனற்கு இறைவன் |
| சென்றான். |
| |
நீ எனை நினைந்த தன்மை- பெருமானே! நீ என்னை வருமாறு நினைத்த தன்மையை; நெடுங்கடல் முடிவில் நின்றேன் ஆயினேன் - இந்தப் பெரிய கடலில் முடிவான இடத்திலே நின்றவனாகிய நான்; அறிந்திலேன் என்று - அறியாதவனானேன் என்று கூறிக் கொண்டு; அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க- இராமபிரானுக்கு ஐயம் தீரும்படி; காய் எரிப்படலை சூழ்ந்த - எரியும் தீத்திரள் எங்கும் சூழ்ந்திருந்த; கருங்கடல் தரங்கத்து ஊடே-கரிய கடல் அலைகளுக்கு இடையிலே; தீயிடை நடப்பான் போல- நெருப்புக்கு இடையிலே நடந்து வருபவனைப் போல்; செறி புனற்கு இறைவன் சென்றான்-செறிந்த கடலுக்கு அரசனான வருணன் வரலானான். |