பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 377

சிந்திய மொழியன் என்றார். அச்ச  மெய்ப்பாட்டுக்கு  இப்பாடல்
நல்ல எடுத்துக்காட்டு.
 

(66)
 

வருணன் இராமபிரானிடம் அடைக்கலம் வேண்டுதல்
 

6655.

'நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக! நீயே சீறின்,
கவயம் நின் சரணம் அல்லால், பிறிது ஒன்று

கண்டது உண்டோ?

இவை உனக்கு அரியவோதான்; எனக்கு என வலி

வேறு உண்டோ?

அவயம், நின் அவயம்!' என்னா, அடுத்து அடுத்து

அரற்றுகின்றான்:

 

நவை  அறும் உலகிற்கு  எல்லாம் நாயக-  குற்ற மற்ற
இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் பெருமானே!; நீயே
சீறின்
- (கருணைமிகுந்த மனத்தை உடைய) நீயே இவ்வாறு என்
மீது சினம்  கொண்டாயானால்; கவயம்  நின்  சரணமல்லால்-
(எனக்குப்  பாதுகாப்பான) கவசம் உனது பாதங்களே அல்லாமல்;
பிறிது  ஒன்று  கண்டதுண்டோ  -  வேறு  ஒன்றினை  நான்
பார்த்ததுண்டோ?; இவை உனக்கு அரியவோதான்- கடலுக்குத்
தீயிட்டு,  உலகை  நடுங்கச்  செய்யும்  இச்   செயல்   உனக்கு
அரியதொன்றே!;   எனக்கு  என  வலி வேறுண்டோ- உனது
வலிமையாய்   வாழ்கின்ற    எனக்கு   எனத்தனியான  வலிமை
வேறுளதோ?; அவயம் நின்  அவயம் என்னா-  அடைக்கலம்
உனக்கு    அடைக்கலம்    என்று;    அடுத்து     அடுத்து
அரற்றுகின்றான்
- அடுத்தடுத்துக் கூறி அரற்றுவானானான்.
 

நவை - குற்றம், கவயம், அவயம்  என்பன கவசம்,  அபயம்
என்பதன் திரிவுகள் 'தலைவனே சீறுவானாயின் அடிமைக்கு வேறு
பாதுகாவல்   ஏது'   என்பான்   'நீயே   சீறின்  கவயம்   பிறி
தொன்றுண்டோ' என்றான்.  'அபயம்.  அபயம்'  என்று பலமுறை
கூறி அரற்றினான் என்பதை 'அடுத்தடுத்து' என்றார்.
 

(67)
 

6656.

'ஆழி நீ; அனலும் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
ஊழி நீ; உலகும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே;
வாழியாய்! அடியேன் நின்னை மறப்பெனோ?

வயங்கு செந் தீச்

சூழுற உலைந்து போனேன்; காத்தருள்-சுருதி

மூர்த்தி!