சண்டம் - கொடுமை. ஈண்டு வெப்பக் கொடுமையே உணர்த்தும். கிரணத்தை வாளாகவும், இருளைக் காடாகவும் கூறியது உருவகம். சூரிய மண்டலத்தின் மத்தியிலே இறைவன் உறைகிறான் என்பது புராணக் கொள்கை. மண்டலம் - பரிதிமண்டலம் உயிரினங்களின் உள்ளத்தாமரையில் உறைபவன் பரமன் ஆதலின் "சராசரத்து உள்ளப் பள்ளப்புண்டரீகத்து வைகும்" என்றான். உள்ளப் பள்ளம் - உள்ளமாகிய பள்ளம் என்றது உருவகம். புராதனன் - பழமையானவன். உள்ளப் பள்ளம் - உள்ளமாகிய பள்ளம் என்பதால் உருவகம். |
(70) |
6659. | ' "கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்! |
| மறையில் கூறும் |
| எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள |
| வள்ளலே! காத்தி" என்ற மா கரி வருத்தம் தீர, |
| புள்ளின்மேல் வந்து தோன்றும் புராதனா! போற்றி, |
| போற்றி! |
| |
கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்- ஒருவரும் உணராதவாறு உலகத்தை எல்லாம் உதரத்தில் வைத்துக் காத்தருளிய கருணை மிக்கவனே; மறையில் கூறும்-வேதங்களில் விரித்துக் கூறப்படுகின்ற; எள்ளல் ஆகாத மூலத்து- எங்கும் இகழ்ந்து பேசமுடியாத மூலப்பகுதியிலிருந்து தோன்றிய; யாதுக்கும் முதலாயுள்ள வள்ளலே- எல்லா உயிர்களுக்கும் முதலாக உள்ள வள்ளலே; காத்தி என்ற மாகரி வருத்தம் தீர- என்னைக் காத்தருள்வாயாக என்று முறையிட்ட பெருமை மிக்க யானையின் துன்பம் தீர; புள்ளின் மேல் வந்து தோன்றும்- பறவையரசனான கருடன் மீதமர்ந்து வந்து தோன்றிய; புராதனா போற்றி போற்றி- பழமையோனே போற்றி போற்றி! |
கள்ளமாய் - ஒருவரும் உணராதவாறு மூலத்து - மூலப்பகுதியிலிருந்து மாகரி - பெருமையுடைய யானை (கஜேந்திரன்) புள் - பறவை, ஈண்டுக்கருடன். வருத்தம் - முதலையால் பட்ட துன்பம். எவரும் உணரமுடியாதவாறு உலகத்துயிர்களை எல்லாம் காத்தருளும் கருணை உடையவன் இறைவன் என்பதை 'கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்' என்பதுணர்த்தும். |
(71) |
6660. | 'அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே; |
| பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே; |