இரந்திட எய்திடாதே- நான் பணிவுடன் கெஞ்சிக் கேட்க வராமல்; சீறுமா கண்டு வந்த திறத்தினை- சீற்றமிகக் கொண்டு நின்றதைக் கண்டு அதன் பிறகு இங்கு வந்த தன்மையை; தெரிவதாகக் கூறுதி அறியஎன்றான்- நான் தெரிந்து கொள்ளுமாறு கூறுவாயாக என்றான் இராமபிரான்; வருணனும் தொழுது கூறும்- அதைக் கேட்ட வருணன் இராமபிரானை வணங்கிக் கூறுவானானான்; |
ஆறுதல் - தணிதல். அஞ்சல் - அஞ்சாதே பணிந்து வணங்கி வேண்டிய போது வராமல், சினந்து சீறிய போது வந்த தன்மைக்கு வியந்து 'சீறுமா கண்டு வந்த திறத்தினைக் கூறுதி' என்று இராமபிரான் கேட்க அதற்கு வருணன் மறுமொழி கூறினான் என்பது கருத்து தெரிவதாக - யாவரும் உணரும்படி. அறியக் கூறுதி - யானறிந்து கொள்ளக் கூறுக. |
(75) |
6664. | 'பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற |
| பண்பு |
| வார்த்தையின் அறிந்தது அல்லால், தேவர்பால் |
| வந்திலேன், நான்; |
| தீர்த்த! நின் ஆணை; ஏழாம் செறி திரைக் கடலில் |
| மீனின் |
| போர்த் தொழில் விலக்கப் போனேன்; அறிந்திலேன் |
| புகுந்ததுஒன்றும்.' |
| |
பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு- நிலமகளைக் காட்டிலும் பொறுமைமிக்க பத்தினியான சீதா பிராட்டி; உற்ற பண்பு வார்த்தையின் அறிந்ததல்லால்- நேர்ந்ததனை இப்போது உனது வார்த்தையால் அறிந்தேனேயல்லாது; தேவர் பால் வந்திலேன் நான்- நான் தேவர்களிடம் வந்தேனல்லேன் (எனவே பிராட்டியின் நிலையை முன்பு அறியேன்); தீர்த்த! நின் ஆணை- தூய்மை மிக்கவனே! உன் மீது ஆணையாகக் கூறுகிறேன்; ஏழாம் செறி திரைக் கடலில்- அலைகள் மிகுந்து செறிந்துள்ள ஏழாவது கடலிலே; மீனின் போர்த் தொழில் விலக்கப் போனேன்- மீன்கள் தங்களுக்குள் பகை கொண்டு செய்த போரை விலக்கச் சென்றிருந்தேன்; அறிந்திலேன் புகுந்தது ஒன்றும்- ஆதலால் இடையில் நிகழ்ந்த செயல் ஒன்றினையும் அறியாதவனானேன். |
பார் - உலகம், இங்கு நிலமகளை உணர்த்தும். பார்தனில் என்றது எதுகை நோக்கி ஓசை இன்பத்துக்காக பார்த்தனில் என வலித்தது. |