பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 403

பொய்கையின் இடங்கர் கவ்வ, 'புராதனா! போற்றி'

என்று

கை எடுத்து அழைத்த யானை போன்றன-களி

நல் யானை.

 

மை  உறு  மலைகளோடும்- மேகங்கள்   தங்கியிருக்கும்
மலைகளுடனே; வந்து  வீழ்ந்த  களிநல்யானை- வானரங்கள்
எடுத்து வீசுவதால்  வந்து  கடலில்  வீழ்ந்த   மதம்  கொண்ட
யானைகள்;  வெய்யவாய் மகரம்  பற்ற வெருவின விளிப்ப-
கொடிய வாயை உடைய முதலைகள் பற்றுவதால் அஞ்சிக் கதறிய
செயல்; மேல்   நாள்   பொய்கையின்   இடங்கர் கவ்வ-
முன்னாளிலே   பொய்கையிலிருந்த   முதலை  காலைக்  கவ்வ;
புராதனா போற்றி என்று-  பழமையான தலைவனே காப்பாயாக
என்று;   கை   எடுத்து   அழைத்த   யானை  போன்றன-
தும்பிக்கையை   மேலே   உயர்த்தி    இறைவனை   அழைத்த
யானையான கஜேந்திரனைப் போன்றிருந்தது.
 

மை  -  கருமை; ஈண்டு  மேகங்கள். களி நல்யானை - மதக்
களிப்புடைய  யானை.  மகரம் -  மகரமீன் (முதலை  எனலுமாம்)
இடங்கர் - முதலை.   கடலுக்குப்   பொய்கையும்.   யானைக்குக்
கஜேந்திரனும் மகரமீனுக்கு முதலையும் உவமையாயின.
 

(16)
 

6690.

அசும்பு பாய் தேனும், பூவும், ஆரமும், அகிலும்,

மற்றும்,

விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து

விம்ம,

தசும்பெலாம் வாசம் ஊட்டிச் சார்த்திய தண்ணீர்

என்ன,

பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது

அன்றே.

 

அசும்புபாய் தேனும் பூவும்- கசிந்து  பாய்கின்ற  தேனும்
மணமலர்களும்;  ஆரமும்  அகிலும் மற்றும்- சந்தனம், அகில்
போன்ற  மற்றும்   பலமணப்   பொருள்களும்; விசும் பெலாம்
உலவும் தெய்வ வேரியின்
- ஆகாயமெல்லாம் பரவும் தெய்விக
மணம் போல;  மிடைந்து விம்ம-  எங்கும் நெருங்கி அதிகரிக்க;
பசும்   புலால் நாறும் வேலை-  பசும்  புலால்  நாற்றம் வீசும்
அக்கடல்; தசும்பெலாம் வாசம் ஊட்டிச் சார்த்திய  தண்ணீர்
என்ன
- மணம்