பக்கம் எண் :

404யுத்த காண்டம் 

ஊட்டப் பெற்று, குடத்திலே நிறைத்து வைத்த தண்ணீர்  போல;
பரிமளம் கமழ்ந்தது- நல்ல மணம் கமழ்வதாயிற்று.
 

அசும்பு -  கசிதல்.  ஆரம் -  சந்தனம்.  தசும்பு -  குடம்.
வேரி -  மணம்.  காற்றோடு கலந்து எங்கும்  மணம் வீசுவதால்
"விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரி' என்றார்; தெய்வங்களும்
விரும்பும் மணம் என்பது கருத்து. விம்மி - மிகுந்து.  சார்த்திய -
நிறைத்து  வைத்த.  "தெருண்ட  மேலவர்  சிறியவர்ச்  சேரினும்
அவர்தம் மருண்ட தன்மையை மாற்றுவர்" என்று முன்னும் (820)
கூறுவது ஒப்பிடத் தக்கது.
 

(17)
 

6691.

தேம் முதல் கனியும் காயும், தேனினோடு ஊனும்,

தெய்வப்

பூ முதலாய எல்லாம், மீன் கொளப் பொலிந்த

அன்றே,

மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மானக்

குன்றம்-

தாம் முதலோடும் கெட்டால் ஒழிவரோ, வண்மை

தக்கோர்?

 

தேம் முதல்  கனியும்   காயும்-   இனிய   பழங்களும்
தின்பதற்குரிய  காய்களும்;  தேனினோடு  ஊனும்- தேனுடன்
தின்பதற்கான  ஊனும்;  தெய்வப்  பூ   முதலாய எல்லாம்-
தெய்வங்களும்  விரும்பும்  மண  மலர்களும்  மற்றும் பலவும்;
மீன் கொளப் பொலிந்தது- (மலைகளை  வானரங்கள் கடலில்
வீசுதலால்)   மீன்கள்   தின்னும்படி   பொலிந்தது;   மாமுதல்
தருவோடு ஓங்கும்
- மாமுதலிய நல்ல பழமரங்கள் நிறைந்துள்ள;
வான் உயர் மானக் குன்றம்- வானமளவும் உயர்ந்துள்ள அந்த
மலைகள்; வண்மை தக்கோர்-வள்ளல் பண்புள்ள மேலோர்கள்;
தாம்   முதலோடும்  கெட்டால்  ஒழிவரோ-  தாம்,  தமது
செல்வத்தை இழந்தாலும் வள்ளல் பண்பு நீங்குவரோ?.
 

தேம் -   இனிமை.   தேம்முதல்   கனி  -   இனிமையைத்
தம்மிடத்தே  கொண்ட   பழம்.  வான்   உயர் மானக்குன்றம் -
கனியும், காயும் பூமுதலாய எல்லாம் மீன்  கொளப்  பொலிந்தது'
என இயையும்.  'வண்மை  தக்கோர் தாம் முதலோடு  கெட்டால்
ஒழிவரோ?' என்ற பொதுப்  பொருளை   விளக்குவதால்   இரு
வேற்றுப் பொருள் வைப்பணியாம்.
 

(18)