6692. | மண்ணுறச் சேற்றுள் புக்குச் சுரிகின்ற மாலைக் |
| குன்றம்- |
| கள் நிறை போதும், காயும், கனிகளும், பிறவும், |
| கவ்வி |
| வெண் நிற மீன்கள் எல்லாம், வறியவர் என்ன,- |
| மேன்மேல் |
| உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் |
| ஒத்த. |
| |
மண்ணுறச் சேற்றுள் புக்கு- மண்ணில் பதித்து சேற்றுக்குள் நுழைந்து; சுரிகின்ற மாலைக் குன்றம் - உள்ளே அழுந்திய மலைகளின் வரிசையானது; கள்நிறை போதும் காயும் கனிகளும் பிறவும்- தேன் நிறைந்த மலர்களும், காய்களும் கனிகளும் பிறவற்றையும்; வெண்நிற மீன்கள் எல்லாம் கவ்வி- வெண்மை நிறமான மீன்கள் எல்லாம் கவ்வி உண்ண எண்ணி; வறியவர் என்ன- எதுவும் கிடைக்கப் பெறாத வறியவர்களைப் போல ஏமாற; மேல்மேல் உள் நிறை செல்வம்-மேலும் மேலும் உள்ளே நிறைந்த செல்வத்தை; நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த- எவருக்கும் தராமல் ஒளித்து வைத்துள்ள உலோபிகளை ஒத்திருந்தது. |
சுரிதல் - உள்ளே அழுந்துதல் மாலை - வரிசை கள் - தேன் போது - மலர். இது உவமையணி. |
(19) |
6693. | கறங்கு எனத் திரியும் வேகக் கவிக் குலம் கதுவ |
| வாங்கி, |
| பிறங்கு இருங் கடலில் பெய்த போழ்தத்தும், பெரிய |
| பாந்தள், |
| மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக, வாய் |
| சோர்ந்து, |
| உறங்கின-கேடு உற்றாலும், உணர்வரோ உணர்வு |
| இலாதார்? |
| |
கறங்கெனத் திரியும் வேகக் கவிக்குலம்- காற்றாடியை ஒத்து வேகமாகச் சுற்றித் திரியும் வானரக் கூட்டம்; கதுவ வாங்கி பிறங்கிடும் கடலில் பெய்த போழ்தத்தும்- மலைகளைப் பற்றிப் பிடுங்கி அந்தப் பெரிய கடலின் மீது எறிந்த போதும்; பெரிய |