பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 407

இழை -  அணிகலம்.  மின்னின்  -   மின்னலைப்   போல
(ஒளியுடைய).    மத்தமா    -   மதம்   பொருந்திய   யானை.
மகரமீன்களுக்கும்     தும்பிக்கை      உண்டு.      ஆதலால்
'புழையுடைத்தடக்கை  பொருந்தச்  சுற்றி'  என்றார்.  மேகங்கள்
இடி  முழக்கத்துடன்  மழை  பொழியும்  மகரமும்  மத்தமாவும்
முழக்கம் செய்து போரிட்டன என்பது கருத்து.
 

(21)
 

6695.

பொன்றின, சிறிய ஆய புண்ணியம் புரிந்தோர்

போல,-

குன்றுகள் குரக்கு வீரர் குவித்தன நெருப்புக்

கோப்ப,

ஒன்றின் மேல் ஒன்று வீழ, உகைத்து எழுந்து, உம்பர்

நாட்டுச்

சென்று, மேல் நிலை பெறாது, திரிந்தன-சிகரச்

சில்லி.

 

குன்றுகள்  குரக்கு வீரர்  குவித்தன-  வானர  வீரர்கள்
கொண்டு வந்து குவித்த மலைகள்; ஒன்றின் மேல் ஒன்று வீழ-
ஒன்றின்  மேல்   ஒன்று   வீழ்வதால்;   நெருப்புக்  கோப்ப-
இடையிலே  நெருப்பு  உண்டாக;  சிகரச்   சில்லி -   மலைச்
சிகரங்களின்   சிறுதுண்டுகள்;   உகைத்து  எழுந்து   உம்பர்
நாட்டுச்  சென்று
- வேகத்தோடு   எழுந்து   விண்ணுலகுக்குச்
சென்று;   மேல்   நிலை   பெறாது- மேலே  நிலைத்து நிற்க
இயலாமல்; பொன்றின சிறிய புண்ணியம்  புரிந்தோர் போல-
இறந்து  போய்விட்ட  சிறிதளவு  புண்ணியம்  செய்தவர்கள் தாம்
செய்த     புண்ணியத்திற்கேற்ப     விண்ணுலகம்      சேர்ந்து
புண்ணியப்பயன்  தீர்ந்து  மீண்டும்  மண்ணுலகு  வருவது போல;
திரிந்தன- கீழே வந்து வீழ்ந்தன.
 

கோப்ப -  உண்டாக  (பிறக்க).  சிகரச்  சில்லி  -  மலைச்
சிகரத்தின் சிறிய துண்டுகள். உகைத்து - விரைந்து உவமையணி.
உம்பர் நாடு - தேவருலகம்.
 

(22)
 

6696.

கூருடை எயிற்றுக் கோள் மாச் சுறவுஇனம் எறிந்து

கொல்ல,

போருடை அரியும், வெய்ய புலிகளும், யாளிப்

போத்தும்,

நீரிடைத் தோற்ற அன்றே?-தம் நிலை நீங்கிச்

சென்றால்,

ஆரிடைத் தோலார் மேலோர், அறிவிடை நோக்கின்

அம்மா?