பக்கம் எண் :

408யுத்த காண்டம் 

கூருடை எயிற்றுக் கோள்மாச்  சுறவினம்-  கூர்மையான
பற்களை உடைய எவரையும் கொல்லவல்ல பெரிய சுறாமீன்கள்;
எறிந்து கொல்ல- வெட்டிக் கொல்வதால்; போருடை அரியும்
-போர்   செய்ய   வல்ல   சிங்கங்களும்; வெய்ய புலிகளும்-
கொடுமை  மிக்க  புலிகளும்;   யாளிப்   போத்தும்-  ஆண்
யாளிகளும்;   நீரிடைத்   தோற்ற  (அன்றே)-  தண்ணீரிலே
தோற்று இறந்தன; அறிவிடை நோக்கின்-அறிவால் ஆராய்ந்து
பார்த்தால்; தம் நிலை  நீங்கிச் சென்றால்-  தாம்  நிலைத்து
வாழுமிடத்தை நீங்கிச்  செல்வாராயின்; மேலோர் ஆரிடைத்
தோலார்
-  வல்லமை   மிக்கவர்களும்  எவரிடம்  தோல்வி
அடையமாட்டார்கள்; தோல்வியுறவே செய்வர்.
 

கூர் உடை  எயிறு   -   கூர்மையானபற்கள்.   கோள்மா -
உயிர்களைக்  கொன்று  கொள்ள வல்ல விலங்கு. சுறவு இனம் -
சுறாமீன்களின்  கூட்டம். தோலார் - தோல்வியடையார். அன்றே,
அம்மா என்பன அசைச் சொற்கள்.
 

(23)
 

6697.

ஒள்ளிய உணர்வு கூட, உதவலர் எனினும் ஒன்றோ,
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும்

அன்றே?-

துள்ளின, குதித்த, வானத்து உயர் வரைக்

குவட்டில் தூங்கும்

கள்ளினை நிறைய மாந்தி, கவி எனக் களித்த,

மீன்கள்.

 

வானத்து உயர்வரைக் குவட்டில்- (வானரங்களால் கடலில்
வீசப்பட்ட  வானளவு  உயர்ந்த மலைகளின்  உச்சியில்; தூங்கும்
கள்ளினை  நிறைய மாந்தி
-  தொங்கிய  தேன்  கூடுகளிலுள்ள
தேனை  நிறையக் குடித்து  விட்டு; கவி  என மீன்கள் களித்த
துள்ளின    குதித்த
-   கடலில்   வாழும்   மீன்கள் எல்லாம்
குரங்குகளைப் போலக்  களித்துத்  துள்ளிக்  குதித்தன  வாயின
என்பது; வள்ளியர்  ஆயோர்- வள்ளல் பண்பு உடையவர்கள்;
ஒள்ளிய உணர்வு  கூட- தெளிவான உணர்வுடனே; உதவலர்
எனினும்   ஒன்றோ
- பிறருக்கு   உதவவில்லை    என்றாலும்;
செல்வம்   மன்னுயிர்க்கு   உதவும் அன்றே-  அவர்களது
செல்வம்    உலகத்து    உயிர்களுக்கு   உதவுமல்லவா   அது
போன்றிருந்தது.
 

குவடு -  சிகரம்.  தூங்கும்  -  தொங்கும்.  கள்  -  தேன்.
வள்ளியர்  ஆயோர்  -  வள்ளல் பண்புடையவர்கள். ஒள்ளிய -
விளக்கத்தை உடைய.