வள்ளியோர் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைத்துத் தரவில்லை என்றாலும், அவர்களது நல்ல செல்வம் பயன் மரம் போல, ஊருணி நீர்போல, மருந்தாகித் தப்பா மரம் போலப் பிறருக்கு உதவும் தன்மையுடையது என்ற கருத்து விளக்கப்பட்டுள்ளது. |
(24) |
6698. | மூசு எரி பிறக்க, மீக்கொண்டு, இறக்கிய |
| முடுக்கம்தன்னால், |
| கோய் சொரி நறவம் என்னத் தண் புனல் உகுக்கும் |
| குன்றின் |
| வேய் சொரி முத்துக்கு, அம்மா விருந்து |
| செய்திருந்த-.ஈண்ட |
| வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம். |
| |
மூசு எரி பிறக்க- செறிந்த நெருப்புத் தோன்றுமாறு; மீக்கொண்டு இறக்கிய முடுக்கம் தன்னால்- (வானரங்கள்) தலையின்மேல் தாங்கிக் கொண்டு வந்து கடலில் வீசிய வேகத்தால்; கோய் சொரிநறவம் என்ன- கள்முகக்கும் பாத்திரத்திலிருந்து சொரியும் கள்ளைப் போல்; தண் புனல் உகுக்கும் குன்றின்- குளிர்ந்த தண்ணீரைச் சொரியும் மலையினது; வேய் சொரி முத்துக்கு- மூங்கில்கள் சொரிகின்ற முத்துக்களுக்கு; ஈண்ட வாய் சொரி இப்பியோடும்- நெருங்கிய இப்பிமீன்களின் வாயிலிருந்து சொரிந்த முத்துக்களும்; வலம்புரி உமிழ்ந்த முத்தம்- வலம்புரிச் சங்குகள் உமிழ்ந்த முத்துக்களும்; விருந்து செய்திருந்த- விருந்து வைத்தது போல் காணப்பட்டன. |
மூசுஎரி - செறிந்த நெருப்பு. மீக்கொண்டு - தலையின் மேல்தாங்கிக் கொண்டு வந்து. முடுக்கம் - வேகம். கோய் - கள்முகக்கும் பாத்திரம். அம்மா- வியப்பிடைச் சொல். குன்றுகள் அருவி நீரைச் சொரிவதற்கு, கள் முகக்கும் பாத்திரத்திலிருந்து ஒழுகும் கள் உவமையாகும். வானரங்கள் மலைகளைத் தலையில் தூக்கி வந்து - தீப் பிறக்கும்படி கடலில் போட்ட வேகத்தினால் மலைகளில் இருந்து அருவி நீர் பெருகியது என்றார். |
(25) |
கலிவிருத்தம் |
6699. | விண்தலம் தொடு மால் வரை வேரொடும் |
| கொண்டு, அலம் கொள வீரர் குவித்தலால், |
| திண் தலம், கடல், ஆனது; நீர் செல, |
| மண்தலம் கடல் ஆகி மறைந்ததே. |