களைப் போல மலை விலங்குகள் மலைகளோடு கடலை அடைந்தன என்பது கருத்து. |
(29) |
6703. | கனி தரும், நெடுங் காய் தரும், நாள்தொறும்- |
| இனிது அருந் தவம் நொய்தின் இயற்றலால்,- |
| பனி தருங் கிரி தம் மனம் பற்று அறு |
| முனிவரும் முனியார், முடிவு உன்னுவார். |
| |
நாள் தொறும்- ஒவ்வொரு நாளிலும்; நெடும் கனி தரும்- உண்பதற்கு இனிய கனிகளைக் கொடுக்கும்; நெடும் காய்தரும்- பெரிதாய் முற்றிய காய்களைக் கொடுக்கும்; இனிது அருந்தவம் நொய்தின் இயற்றலால்- அரியதவத்தை இனிதே எளிதில் செய்வதற்கு இடமாக; பனிதரும் கிரி - குளிர்ச்சியைத் தருகின்ற மலையினை; தம்மனம் பற்றறு முனிவரும்- தமது மனத்தில் பற்றற்ற முனிவர்களும்கூட; முடிவு உன்னுவார்- (பின் விளைவை எண்ணி) அரக்கர்களின் முடிவை நினைப்பவராய்; முனியார் - மலைகளைப் பெயர்த்த வானரங்களை வெகுளாராயினர். |
முடிவு உன்னுவார் - மலைகளோடு கடலில் வீழ்ந்து தாம் அழிவதை நினைத்தும் முனிவர் முனியாராயினர் எனினுமாம். காலமல்லாக் காலத்தும் முனிவர்கள் பசிதீரக் கனிதரும் நெடுங்காய்தரும் என்பது கருத்து. |
(30) |
6704. | புலையின் வாழ்க்கை அரக்கர், பொருப்பு உளார், |
| தலையின்மேல் வைத்த கையினர், சாற்றுவார், |
| 'மலை இலேம்; மற்று, மாறு இனி வாழ்வது ஓர் |
| நிலை இலேம்' என்று, இலங்கை நெருங்கினார். |
| |
பொருப்புளார்- மலைகளிலே வாழ்பவர்களாகிய; புலையின் வாழ்க்கை அரக்கர்- பாவத் தொழில்களையே புரிந்து வாழும் கொடிய அரக்கர்கள்; தலையின் மேல் வைத்த கையினர்- (வானரங்கள் மலைகளைப் பெயர்த்துக் கடலில் வீசியதால்) தலையின் மீது வைத்த கையினராக; மலை இலேம்- நாங்கள் வாழ்ந்த மலைகளை இழந்தவரானோம்; மற்று இனி வாழ்வதோர் நிலைஇலேம்- மற்று இனி நாங்கள் வாழ்வதற்கு நிலையான ஒரு இடம் இல்லாதவரானோம்; என்று சாற்றுவார்- என்று கூறியவராக; இலங்கை நெருங்கினார் - இலங்கையை அடைந்தார்கள். |