பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 413

துயரத்தால் வருந்துவோர் தலைமேல் கை வைத்தல் வழக்கம்.
மலையை  இழந்தோம். நிலையான வாழ்வையும் இழந்தோம் என்று
அவ்வரக்கர்  கூறி  வருந்தினர் என்பதால் 'மலை இலேம் மற்றினி
வாழ்வதோர் நிலை இலேம்" என்றனர்.
 

(31)
 

6705.

முழுக்க நீரில் புகா, முழுகிச் செலா,
குழுக்களோடு அணை கோள் அரி, யாளிகள்,
இழுக்கு இல் பேர் அணையின் இரு பக்கமும்

ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்தவே.

 

முழுக்க   நீரில்   புகா  -  முழுவதும் கடல் நீருக்குள்
மூழ்காதவையும்;     முழுகிச்   செலா-   நீரில்   மூழ்கியும்
செல்லாதனவாய்   நின்றவையுமான;  குழுக்களோடு  அணை-
கூட்டம்  கூட்டமாய்  நெருங்கியிருக்கும்; கோளரி   யாளிகள்-
உயிர்களைக் கொல்லவல்ல  சிங்கங்களும் யாளிகளும்; இழுக்கு
இல்  பேரணையின்
-  குற்றமற்ற அந்தப் பெரிய அணையின்;
இருபக்கமும்- இரண்டு  பக்கங்களிலும்; ஒழுக்கின்  மாலை
வகுத்தன ஒத்த
- ஒழுங்கு பெற வரிசையாக  நிற்க வைத்தவை
போன்றன.
 

அணைதல் - நெருங்குதல். கோள்- கொள்ளவல்ல. ஒழுக்கின்
- ஒழுங்காக. மாலை - வரிசை.
 

(32)
 

6706.

பளிக்கு மால் வரை முந்து படுத்தன

ஒளிக்கும் ஆழி கிடந்தன ஓர்கிலார்,

'வெளிக்கு மால் வரை வேண்டும்' எனக்

கொணர்ந்து,

அளிக்கும் வானர வீரர் அநேகரால்.
 

பளிக்குமால்  வரை- பெரிய பளிங்கினாலமைந்த மலைகள்;
முந்து படுத்தன- முன்பு வானரங்களால் கடலில் வீசப்பட்டவை;
ஒளிக்கும் ஆழி கிடந்தன ஓர்கிலார்- கடலுக்குள் கிடப்பதை
அறியாதவராய்;  வெளிக்கு  மால்  வரை  வேண்டும்- இந்த
இடைவெளிக்கு ஒரு பெரிய மலை தேவை; எனக் கொணர்ந்து
அளிக்கும்
- என்று  கூறிப்பெரிய மலைகளைக்  கொண்டு வந்து
தருகின்ற;  வானர  வீரர் அநேகரால்-  வானரவீரர் அநேகம்
பேராவார்.
 

பளிங்கு மலை நீரைத் தடுத்திருந்ததை அறியாத வானரங்களை
'ஓர் கிலார்' என்றார்.  ஒளிக்கும்  ஆழி - ஒளிக்கப்பட வேண்டிய
கடல் ஓர்தல் - உணர்தல் வெளி - இடைவெளி.
 

(33)