பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 415

இராமன்   வருணனுக்குத்   தந்தது   போலக்   காணப்பட்டது
அடுக்கிய  மலைகளின்  காட்சி.  செம்மணி  முதலான  பல நிற
கொண்ட மலையடுக்கு இவ்வாறு வருணிக்கப்பட்டது.
 

(35)
 

6709.

ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம்
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின், ஆழ் கடல்
பாய்ந்து பண்டு உறையும் மலைப் பாந்தள்கள்,
போந்த மா மலையின் முழை, புக்கவே.
 

ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு- தமது உயிருக்குப்
பொருந்திய   உடம்பை  விட்டு  விட்ட  அவ்வுயிருக்கு; இடம்
ஆய்ந்து  கொள்ளும்  அறிஞரின்
-  பொருந்திய   இடமான
உடலை ஆய்ந்து மறுபடியும் சென்றடையும் யோகிகளைப் போல;
மலைப் பாந்தள்- மலைப் பாம்புகள்; ஆழ்கடல்  பாய்ந்து-
மலைகளை வானரங்கள்  கடலில் வீசியபோது அந்தக் கடலிலே
பாய்ந்து;   பண்டு  உறையும்  மலை  போந்த- முன்பு  தாம்
வாழ்ந்த  மலையை  அடைந்து; மாமலையின்  முழை புக்க-
அந்த மலைக்குகைகளில் நுழைந்தன.
 

கூடுவிட்டுக் கூடுபாயும் சித்து வல்ல யோகிகள் தம் உடலை
விட்டு நீங்கி வேறு  உடலில்  வாழ்ந்து,  பின்  தமது  உடலைத்
தேடியடைந்து சென்றடைவதை ஒத்து மலைப்பாம்புகளின் செயல்
இருந்தது  என்பதால்  இது உவமையணி. அறிஞர்  -  யோகிகள்.
பாந்தள் - பாம்பு.
 

(36)
 

6710.

சேதுவின் பெருமைக்கு இணை செப்ப, ஓர்
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்கொலோ-
தூதன் இட்ட மலையின் துவலையால்,
மீது விட்டு-உலகு உற்றது, மீன் குலம்?
 

சேதுவின்  பெருமைக்கு  இணை   செப்ப-  சேதுவின்
பெருமைக்கு இணையாகச் சொல்ல; ஓர் ஏது வேண்டும் என்று-
ஒரு காரணம்  வேண்டும் என்று; எண்ணுவர்  என்  கொலோ-
நினைப்பது எதற்காக?; தூதன் இட்ட மலையின் துவலையால்-
இராம  தூதனாகிய  அனுமன்  கடலில் எறிந்த மலையால் எழுந்த
நீர்த்திவலைகளோடு;  மீன்   குலம்-  அக்கடலில்   வாழுகின்ற
மீன் கூட்டங்களும்; மீது  விட்டு  உலகுற்றது-  மேலானதாகிய
வீட்டுலகை அடைந்தது.
 

சேது - அணை. மீதுவிட்டு உலகு - மேலதாகிய  வீட்டுலகம்
மீன்கள் நீர்த்துளிகளோடு  விண்ணுலகடைந்தன  என்பதன் நயம்
கருதத்