வாலி. அவன் மகன் அங்கதன் எதனாலும் விலக்கொணாத மலையைக் கொண்டு, கடல் துன்புறும் படி அக்கடலைக் கலங்கச் செய்தான் என்பது கருத்து. அலக்கண் - துன்பம் ஆழி - கடல். இலக்குவனது அம்பின் வலிமையை' முன்னும் பின்னும் (கம்ப. 2416. 7287) இராமனும் இராவணனும் கூறுவதனாலறியலாம். |
(41) |
6715. | மருத்தின் மைந்தன் மணி நெடுந் தோள் எனப் |
| பெருத்த குன்றம், கரடிப் பெரும் படை |
| விருத்தன் இட்ட விசையினின், வீசிய |
| திருத்தம், வானவர் சென்னியில் சென்றதால். |
| |
கரடிப் பெரும்படை விருத்தன்- கரடிகளின் பெரிய படைக்குத் தலைவனான சாம்பவந்தன் என்னும் முதியோன்; மருத்தின் மைந்தன் - காற்றுத் தேவனாகிய வாயுவின் மகனான அனுமனது; மணி நெடுந்தோள் எனப் பெருத்தகுன்றம்- அழகிய பெரிய தோள்களைப் போன்ற ஒரு பெரிய மலையை; இட்ட விசையினின் - கடலில் எறிந்த வேகத்தினால்; வீசிய திருத்தம்- மேலே தெரித்த தீர்த்தம்; வானவர் சென்னியில் சென்றது- தேவர்களது தலையில் சென்று தெறித்தது. |
விருத்தன் - வயதானவன். சாம்பவந்தன் நெடுங்காலம் வாழ்ந்த, நீண்ட ஆயுளை உடையவன். கரடிப் படைக்குத் தலைவன் என்பதால் 'கரடியின் பெரும் படை விருத்தன்' என்றார். அனுமனது தோள்களை வியந்து 'மருத்தின் மைந்தன் மணி நெடுந் தோளெனப் பெருத்த குன்றம்' என்றார். மருத்து - காற்றுத்தேவன். விசை - வேகம். சிரத்தில் சென்று தெறித்தமைக்கு ஏற்ப நீர் என்று கூறாது "திருத்தம்" என்றார். தீர்த்தம் என்பதன் திரிபே திருத்தம். தீர்த்தம் - புனித நீர் எதுகை நோக்கி 'திருத்தம்' எனத் திரிந்தது. |
(42) |
6716. | குமுதன் இட்ட குல வரை கூத்தரின் |
| திமிதம் இட்டுத் திரியும் திரைக் கடல் |
| துமி தம் ஊர் புக, வானவர் துள்ளினார்- |
| அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால். |
| |
குமுதன் இட்ட குலவரை- குமுதன் என்னும் வானரத் தலைவன் கடலில் எறிந்த சிறந்த தொருமலை; கூத்தரின் திமிதம் இட்டு- கூத்தாடுபவர்களைப் போலக் குதித்து ஆடி; திரியும் திரைக் கடல்- சுழன்று திரியும் அலைகளையுடைய கடலில்; துமிதம் ஊர்புக- நீர்த்துளிகள் தங்கள் ஊரிலே வந்து விழுவதால்; அமுதம் |