இன்னம் எழும் எனும் ஆசையால்- (முன்பு பாற்கடலை மந்தர மலையைக் கொண்டு கடைந்ததால் எழுந்த அமுதத்தைப் போல) இன்னும் அமுதம் எழக் கூடும் என்ற ஆசையால்; வானவர் துள்ளினார்- தேவர்கள் மகிழ்ந்து துள்ளலாயினர். |
குமுதன் - வானரத்தலைவருள் ஒருவன். குலவரை - சிறந்த மலை. திமிதம் - திமிதம் என்று ஒலித்துக் கூத்தாடுதல் துமி - துளி. இச் சொல் இப் பொருளில் உலக வழக்கில் வழங்குவதாகக் கூறிய கம்பருக்கு, கலை மகளே ஆய்ச்சி வடிவில் வந்து தயிர் கடைந்து கொண்டிருக்க, பிள்ளைகள் நெருங்கி வர 'துமி தெறிக்கும் தூரப் போங்கள்" என்று கூறியதாக ஒரு கதை வழங்குகிறது. |
(43) |
6717. | கன சினத்து உருமின் கடுங் கார் வரை |
| பனசன் இட்டன யாவும் பரிக்கிலன், |
| மன சினத்த அனந்தனும், வாழ்வு இகந்து, |
| அனசனத்தொழில் மேற்கொள்வது ஆயினான். |
| |
கனசினத்து உருமின் - மிகுந்த கோபத்துடன் இடியைப் போல் முழங்கி; கடும் கார் வரை- கடிய பெரிய கரிய மலைகளை; பனசன் இட்டன யாவும்- 'பனசன்' என்ற வானரத் தலைவன் கடலில் எறிய அவை அனைத்தையும்; பரிக்கிலன்- தாங்க இயலாதவனாய்; மன சினத்து அனந்தனும்- மனத்திலே மிக்க சினத்தை உடையவனான ஆதிசேடனும்; வாழ்வு இகந்து- பாரத்தைச் சுமந்து வாழ்வதை விட்டு (உயிர்துறக்க); அனசனத் தொழில் - உணவு உண்ணாதிருத்தலாகிய தொழிலை; மேற் கொள்வதாயினான்- மேற்கொள்ளலானான். |
பனசன் - வானரத் தலைவன் ஒருவன். பரிக்கிலன் - தாங்க இயலாதவனாய் அனந்தன் - ஆதிசேடன் வாழ்விகந்து - வாழ்வை விட்டு அன் + அசனம் = அனசனம்- உண்ணாதிருத்தல் அசனம் - உணவு கோவைப்பகுதியில் கிராமப்புறங்களில் பட்டிப் பொங்கலன்று 'அசனமுண்ணுபட்டியாரே' என்று கூறி மாடுகளுக்கு உணவுண்ணச் செய்தலுண்டு' என்பதால் அசனம் - உணவு என்ற பொருள் கொண்ட சொல்லாக வழங்குவது புலனாகும். ஆதிசேடன் கோபம் மிக்கவன் என்பதால் 'மன சினத்து அனந்தன்' என்றார்; இலக்குவன் சீற்ற முற்ற போது "தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான்" என்றது (கம்ப. 1717) நினைவு கூரத்தக்கது. |
(44) |