பக்கம் எண் :

420யுத்த காண்டம் 

6718.

எண் இல் எண்குஇனம் இட்ட கிரிக் குலம்,
உண்ண உண்ணச் சென்று, ஒன்றினொடு ஒன்று

உற,

சுண்ண நுண் பொடி ஆகித் தொலைந்தன,
புண்ணியம் பொருந்தாத முயற்சிபோல்.
 

எண்இல்  எண்கு  இனம்-  எண்ண முடியாத கரடிகளின்
கூட்டம்; இட்ட கிரிக் குலம்-   கடலில்   இட்ட மலைகளின்
கூட்டம்; உண்ண   உண்ணச்   சென்று-   கடலில் அழுந்த
அழுந்தச் சென்று; ஒன்றினொடு ஒன்று உற- ஒன்றுடன் ஒன்று
பொருந்துவதால்;  புண்ணியம்  பொருந்தாத  முயற்சிபோல்-
புண்ணியப்பயன் பொருந்தாத முயற்சிக்குப் பயனில்லாதது போல;
சுண்ண நுண் பொடியாகித் தொலைந்தன- நுண்ணிய தூளாகி
அழிந்தன.
 

எண்கு - கரடி.   கிரிக்குலம்   -   மலைகளின்   கூட்டம்.
என்றார்.
 

(45)
 

6719.

ஆர ஆயிர யோசனை ஆழமும்
தீர நீண்டு பரந்த திமிங்கிலம்,
பார மால் வரை ஏறப் பதைத்து, உடல்
பேரவே, குன்றும் வேலையும் பேர்ந்தவால்.
 

ஆர ஆயிரம்  யோசனை  ஆழமும்-  கடலில் ஆயிரம்
யோசனை ஆழமும்; தீரநீண்டு பரந்த  திமிங்கிலம்- முழுதும்
நீண்டு   பரந்துள்ள   திமிங்கிலங்கள்; பார  மால் வரை ஏற-
பாரமான  பெரிய  மலை தன் மீது வீழ்தலால்; பதைத்து உடல்
பேரவே
- பதை  பதைத்து   உடலைப் பெயர்த்தலால்; குன்றும்
வேலையும்
-   திமிங்கிலங்களின்மீது  விழுந்த    மலைகளும்,
கடல்நீரும்;         பேர்ந்தவால்-      இடம்      விட்டுப்
பெயர்ந்தனவாயின.
 

கடலில்   ஆயிரம்   யோசனை  தூரம்  நீண்டு பரந்துள்ள
திமிங்கிலங்களின்  மீது  பாரமான  மலைகள்  வீழ்வதால் பதை
பதைத்து  உடலைப்  பெயர்த்தன. அதனால் மலைகளும், கடல்
நீரும் இடம் பெயர்ந்தன  என்பது கருத்து.  யோசனை -  நூறு
மைல் என்பர். (பத்துக்காதம் ஒரு யோசனை) பாரமால் வரை -
பாரமான பெரிய மலை (பாரம் + மால் + வரை) (அசைய)
 

(46)
 

நளன் சேதுவை அமைத்த வகை
 

6720.

குலை கொளக் குறி நோக்கிய கொள்கையான்,
சிலைகள் ஒக்க முறித்துச் செறித்து, நேர்