பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 423

ஆராய்ந்து  பார்த்து;   ஓய்ந்த   கால-   கால்கள்   ஓய்ந்து
போனவையாய்; பசியின் உலர்ந்தன- பசியினால் வாடியனவாய்;
ஏந்து   மால்   வரை வைத்து- கைகளில்   ஏந்திய  பெரிய
மலைகளைக்  கீழே  வைத்து  விட்டு; அவற்று  ஈண்டு தேன்
மாந்திமாந்தி
- அம்மலையிலே உள்ளதேனை மிகுதியாக உண்டு;
மறந்து துயின்ற- போக  வேண்டிய காரியத்தை  மறந்து போய்
தூங்கலாயின.
 

உலர்ந்தன -   வாடினவாக.  அவற்று   ஈண்டு   தேன்  -
அவைகளில்  நிறைந்துள்ள  தேனை.  மிளகுக்  கொடி  படர்ந்த
சந்தன   மரத்தில்  ஏறப் புகுந்த  குரங்கு, பக்கத்துப்  பாறையில்
இருந்த தேனைக் குடித்து உறங்கி விடுவதாக  கபிலர்  (அகநா.2)
காட்டிய காட்சியைக் கம்பர் நினைந்தார் போலும்.
 

(51)
 

6725.

போதல் செய்குநரும், புகுவார்களும்,
மாதிரம்தொறும் வானர வீரர்கள்,
'சேது எத்துணைச் சென்றது?' என்பார் சிலர்;
'பாதி சென்றது' எனப் பகர்வார் சிலர்.
 

போதல்  செய்குநரும்- மலைகளை மீண்டும் கொண்டு வரச்
செல்பவர்களும்;   புகுவார்களும்-  அணைகட்ட   மலைகளைக்
கொண்டு வருபவர்களுமாகிய; மாதிரம் தொறும் வானர வீரர்கள்-
எல்லாத் திசைகளிலும்  நிறைந்துள்ள வானர  வீரர்களுக்குள்; சேது
எத்துணை  சென்றது  என்பார் சிலர்
- அணை எத்தனை தூரம்
சென்றுள்ளது என்று  வினவுவார்  சிலர்; பாதி  சென்றது  எனப்
பகர்வார்  சிலர்
- அவ்வாறு  வினவியர்களுக்கு  விடையாக பாதி
அளவு சென்றுள்ளது என்று கூறுவார் சிலர்.
 

போதல்   செய்குநர் -  செல்லுபவர்.  புகுவார்  -   வருபவர்.
மாதிரம் -  திசை  எத்துணை  -  எந்த  அளவு.  புகுவார் வினவ,
போதச் செய்கின்றார் விடை பகர்ந்தனர் என்க.
 

(52)
 

மலைகளும் மரங்களும் கடலில் மூழ்கும் நிகழ்ச்சிகள்
 

6726.

குறைவு இல் குங்குமமும், குகைத் தேன்களும்,
நிறை மலர்க் குலமும், நிறைந்து எங்கணும்,
துறைதொறும் கிரி தூக்கின தோய்தலால்,
நறை நெடுங் கடல் ஒத்தது, நாம நீர்.