பக்கம் எண் :

424யுத்த காண்டம் 

கிரி  தூக்கின  தோய்தலால் - வானர  வீரர்கள்  தூக்கிக்
கொண்டு  வந்த  மலைகள் கடலில் தோய்வதால்; துறைதொறும்-
அந்தக்   கடலின்   எல்லாப்  பகுதிகளிலும்  (நீளத்துறைகளிலும்);
குறைவில் குங்குமமும்-  தன்மையில் குறைவில்லாத குங்குமமும்;
குகைத் தேன்களும்- மலைக் குகைகளிலிருந்து விழுந்த தேனும்;
நிறை மலர்க் குலமும்  -  நிறைந்த  பலவித   மணமலர்களின்
கூட்டமும்; எங்கணும் நிறைந்து- எங்கும் நிறைந்து  கிடப்பதால்;
நாம  நீர்  -  அச்சத்தைச்   செய்யும்   உவர்க்  கடல்;  நறை
நெடுங்கடல்  ஒத்தது
  -   தேன்  நிறைந்த   நெடிய  கடலை
ஒத்திருந்தது.
 

நாமநீர்  -  அச்சத்தைத்  தரும்  உவர்க்கடல்.  கிரிதூக்கின
குங்குமமும்   தேன்களும்   மலர்க்குலமும்   -    தோய்தலால்
நாமநீர்.  நறை  நெடுங்கடல்  ஒத்தது  எனஇயையும். கிரிதூக்கின
என்பதற்கு மலைகள் சுமந்துள்ள குங்குமம்  முதலியவை எனவும்
வானரங்கள் தூக்கிய மலை எனவும் பொருள் கூறலாம்.
 

(53)
 

6727.

நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும்,
துடும்பல் வேலை துளங்கியது இல்லையால்-
இடும்பை எத்தனையும் படுத்து எய்தினும்,
குடும்பம் தாங்கும் குடிப் பிறந்தாரினே.
 

இடும்பை எத்தனையும்  படுத்து எய்தினும்- துன்பங்கள்
எத்தனையும்  வந்து   தடுத்து   எய்தினாலும்; (அதனால்) மனம்
தளர்ந்து போகாமல்; குடும்பம்  தாங்கும்- தமது  குடும்பத்தை
ஆதரித்துக்   காப்பாற்றும்;  குடிப்   பிறந்தாரின்  -   உயர்
குடியில்  பிறந்தவர்களைப்  போல; நெடும்  பல்மால்  வரை-
நீண்ட பெரிய பல  மலைகள்; தூர்த்து  நெருக்கவும்- தூர்த்து
நெருக்கிய போதும்; துடும்பல்  வேலை- அலைகள் பேரொலி
எழுப்பும்  பெரிய  கடல்; துளங்கியது  இல்லையால்- சிறிதும்
கலங்க வில்லை.
 

இடும்பை -  துன்பம்.    படுத்து  -   தடுத்து.   தாங்கும் -
ஆதரித்துக்   காக்கும்.   இது   உவமையணி.  குடிப்பிறந்தார் -
உவமானம்  துடும்பல்   வேலை  -  உவமேயம்.  இடும்பைக்கே
கொள்கலம்  கொல்லோ  குடும்பத்தைக்   குற்றம்   மறைப்பான்
உடம்பு (குறள் 1029) எவ்வழி உழந்தக் கடைத்தும் குடிப்பிறந்தார்
செய்வர்  செயற்பாலவை  (நாலடி. 147)  என்ற கருத்துகள் இங்கு
இணைத்து உணரத் தக்கன.
 

(54)
 

6728.

கொழுந்துடைப் பவளக் கொடியின் குலம்
அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து, அயல்