பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 425

விழுந்த பல் மணியின் ஒளி, மீமிசை
எழுந்த எங்கணும். இந்திர வில்லினே.
 

கொழுந்துடைப் பவளக் கொடியின் குலம்- கொழுந்துகளை
உடைய   பவளக்  கொடிகளின்   கூட்டம்;   அழுந்த   உய்த்த
அடுக்கல்
-  கடலின்  உள்ளே  அழுந்தும்படி  எறிந்த  மலைகள்;
தகர்ந்து  அயல் விழுந்த பல்மணியின் ஒளி- உடைந்து போய்
அதனால்  பக்கங்களில்  விழுந்த  பல மணிகளின் ஒளிக் கதிர்கள்;
இந்திரவில்லின்-  வானத்திலே   காணப்படும்   இந்திரவில்லைப்
போல; மீமிசை  எங்கணும்  எழுந்த-  மேலே   எவ்விடத்தும்
காணப்பட்டன.
 

அழுந்த - கடலில் அழுந்தும்படி. உய்த்த - எறிந்த. அடுக்கல்-
மலை. இந்திரவில் -  வானவில்.  வானவில்லின்  பல  நிறங்களைப்
போலப் பலமணிகளின் ஒளிக்கற்றைகள் ஒளிர்ந்தன.
 

(55)
 

6729.

பழுமரம் பறிக்க, பறவைக் குலம்,
தழுவி நின்று ஒருவன் தனித் தாங்குவான்
விழுதலும், புகல் வேற்று இடம் இன்மையால்,
அழுது அரற்றும் கிளை என ஆனவால்.
 

பழுமரம் பறிக்க- வானர  வீரர்கள் அணை  கட்ட  ஆல்
மரங்களை வேரொடு பறித்து விடுவதால்; பறவைக்குலம்- அந்த
மரங்களை   வாழுமிடமாக  உடைய  பறவைக்கூட்டம்;  தழுவி
நின்று  ஒருவன்
-  ஒருவனாகவே கிளைகளைத் தழுவியிருந்து;
தனித்   தாங்குவான்   விழுதலும்-   தனியாகத்    தாங்கி
ஆதரிப்பவன்  இறந்துபட; புகல்  வேற்றிடம்  இன்மையால்-
வேறு  புகலிடம் இல்லாமையால்; அழுது அரற்றும்கிளை என
ஆன
- அழுது புலம்பும் கிளைஞரைப் போலாயின.
 

பழுமரம் - ஆலமரம்.  உவமையணி அழுது  அரற்றும்கிளை
உவமானம். பறவைக்குலம் - உவமேயம்.
 

(56)
 

6730.

'தர வலோம், மலர்' என்று, உயிர் தாங்கிய
மரம் எலாம் கடல் வீழ்தலும், வண்டு எலாம்,
கரவு இலாளர் விழ, களைகண் இலா
இரவலாளரின், எங்கும் இரிந்தவால்.