பக்கம் எண் :

466யுத்த காண்டம் 

ஏவிய அன்றிப் பிறிது ஒன்றுதாமே செய்ய வல்லவர் அல்லர்
ஆதலின்  கூர்   அறிவு  குறைந்தவர்கள்,  ஊமையர்,  செவிடர்
முதலியோர்     மந்திராலோசனையில்    ஈடுபட்டிருப்போர்க்குக்
குற்றேவல் செய்ய அனுமதிக்கப் பட்டனர்.
 

(41)
 

6787.

'நணியர், வந்து மனிதர்; நமக்கு இனித்

துணியும் காரியம் யாது?' எனச் சொல்லினான்-

பணியும் தானவர் ஆதியர் பல் முடி

மணியினால் விளங்கும் மணித் தாளினான்.*
 

பணியும்   தானவர்  ஆதியர்   பல்முடி  -  (தன்னை)
வணங்குகின்ற  அசுரர்   முதலானோரின்  பற்பல மகுடங்களின்;
மணியினால் விளங்கும்  - மாணிக்கங்களினால் ஒளிவிடுகின்ற;
மணித்தாளினான்  -    அழகிய    பாதங்களையுடையவனான
இராவணன்;  மனிதர்   வந்து  நணியர்  -  (நம் பகைவரான)
மனிதர்கள் (நம்மை நோக்கி) வந்து அண்மையர் ஆயினர்;நமக்கு
இனித் துணியும் காரியம் யாது?
- நாம் இனித் துணிந்து ஆற்ற
வேண்டிய  செயல்கள் யாவை?; எனச் சொல்லினான்- என்று
(மந்திரச் சுற்றத்தாரை நோக்கிக்) கேட்டான்.;
 

நணிமை  -  அண்மை. அசுரரும் தேவரும் வந்து வணங்கும்
அடியுடையான்  'மனிதர்   நணியர்'  என  அஞ்சி ஆலோசனை
கேட்க நேர்ந்துள்ளது என்பது ஒரு நயம். பகைவர் மிக அருகில்
உளர் ஆனதனால்   தான்,   இரவில்  மந்திராலோசனை அவை
கூட்டப்பட்டுள்ளது. என்பதனை உணர்க என்பது குறிப்பு.
 

(42)
 

மாலியவான் அறிவுரை
 

6788.

'கால வெங் கனல் போலும் கணைகளால்

வேலை வெந்து, நடுங்கி, வெயில் புரை

மாலை கொண்டு வணங்கினவாறு எலாம்

சூலம் என்ன என் நெஞ்சைத் தொளைக்குமால்.
 

கால  வெங்கனல்  போலும் - (அப்போது பாட்டனாகிய
மாலியவான் இராவணனை நோக்கிக் கூறுவான்) ஊழிக் காலத்துக்
கடலிடைத்  தோன்றும்  கடுந்தீயே  போன்று; கணைகளால்-
(இராமனின்) அம்புகளால்; வேலை வெந்து நடுங்கி- சமுத்திர
ராசனாகிய வருணன்  தீப்பட்டு  நடுங்கி; வெயில் புரை மாலை
கொண்டு
- வெயிலைப் போல் ஒளிவிடும் நவமணி