பக்கம் எண் :

468யுத்த காண்டம் 

துடைத்த  வானரவீரர்- (உலகிலேயே  பெரிய மலைகள் இனி
இல்லை  என்னுமாறு)  செய்து விட்ட குரங்கு இன வீரர்கள்; தம்
தோள்களைப்  புடைத்த வாறும்
-  (வெற்றிக் களிப்பால்) தம்
தோள்களைக்   கொட்டி    மகிழ்ந்த   செயலும்;   புணரியைப்
போக்குஅற  அடைத்தவாறும் 
-   அவ்வாறு   மலைகளைப்
பெயர்த்து  வந்து   இட்டு,  மாகடலை இடம் விட்டு நகராதவாறு
அடைத்த  செயலும்;   என்   உள்ளத்து  அடைத்த -  என்
உள்ளத்தினை   (வேறு  எண்ண   இயலாத  படி)   அடைத்துக்
கொண்டுள்ளன.
 

புணர்தல்- கூடுதல். எல்லா நதிகளும் வந்து கூடுமிடமாதலின்,
கடல்   புணரியெனப்  பட்டது.  ஓயாமல்  அலைந்து,   நகர்ந்து
கொண்டேயிருக்கும் கடலை அப்புறம் இப்புறம் அசையாமல் சேது
நிறுத்தி  விட்டது  என்பான், "புணரியைப் போக்கு அற அடைத்த
வாறும்" என்றான்.
 

(45)
 

6791.

'காந்து வெஞ் சின வீரர், கணக்கு இலார்,

தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத் தர,

வேந்த! வெற்பை ஒருவன் விரல்களால்

ஏந்தி இட்டது என் உள்ளத்தின் இட்டதால்.
 

வேந்த! - (இலங்கை)  வேந்தனே!; காந்து வெஞ்சின வீரர்
கணக்கு இலார்
- கனலும் கொடுஞ்சினமுடைய எண்ணற்ற வானர
வீரர்கள்; தாம்  தம்  ஆற்றலுக்கு  ஏற்ற தர, தர - தங்கள்
தங்களுடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு தக்க மலைகளைக் கொண்டு
வந்து கொடுக்க, கொடுக்க; வெற்பை- அந்தப் பெரு மலைகளை
(யெல்லாம்); ஒருவன் விரல்களால்- (நளன் என்னும்) ஒப்பற்ற
வீரன்  தன் கைவிரல்களால்;  ஏந்தி இட்டது- தாங்கி (தாங்கிக்)
கடலில்   இட்டது;   என்  உள்ளத்தின்  இட்டது  -   என் 
நெஞ்சிலேயே இட்டது போன்றிருந்து என்னை வருத்துகின்றது.
 

வந்து வீழ்ந்த மலைகள், வானர வீரர்கள் உடல் வடிவத்துக்கு
ஏற்றாற்  போலவன்றி,  அவர்  நெஞ்சுரத்துக்கு  ஏற்றாற்  போல
அமைந்தது   என்பார், "தாம்  தம்  ஆற்றலுக்கு  ஏற்ற  தரத்தர"
என்றார். "தரத்தர" எனும் அடுக்கு விரைவும் பன்மையும் குறித்து
நின்றது.
 

(46)

6792.

'சுட்டவா கண்டும், தொல் நகர் வேலையைத்

தட்டவா கண்டும், தா அற்ற தெவ்வரைக்

கட்டவா கண்டும், கண் எதிரே வந்து

விட்டவா கண்டும், மேல் எண்ண வேண்டுமோ?'