ஐயனே என விளித்தது மாலியவானை. கண்மை - கண்ணின் தன்மையாகிய காட்சி. இங்குக் கண்ணுக்கு நேராகக் கண்டதைக் குறித்தது. பகைவன் தீரச் செயல் ஒன்றே ஒன்று மட்டும் உங்கட்குக் கண்ணாரக் கண்ட காட்சியாகத் தெரிகிறதேயன்றி, நம்வேந்தன் புரிந்துள்ள வீரச் செயல்கள் பல புரியாமற் போயுள்ளன; இருக்கட்டும். எட்டுத் திக்குப் பாலகர்களும் நம் வேந்தன் இணையடியினை வந்து இறைஞ்சிய வண்ணம் உள்ளார்களே! அந்த உண்மை ஒன்றையாவது நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்று படைத்தலைவன் மொழிகின்றான். |
(50) |
6796. | ' "கூசி வானரர் குன்று கொடு இக் கடல் |
| வீசினார்" எனும் வீரம் விளம்புவாய்; |
| ஊசி வேரொடும் ஓங்கலை, ஓங்கிய |
| ஈசனோடும், எடுத்ததும் இல்லையோ? |
| |
கூசி - நீ வானரர்க்கு அஞ்சினவனாய்; குன்று கொடு- மலைகளையெடுத்து; இக்கடல் வீசினார் எனும் வீரம் விளம்புவாய்- (அவ்வானரர்கள்) இக்கடலுள் வீசினர் என்கின்ற (அவர்) வீரச் செயலையே விளம்பிக் கொண்டுள்ளாய்; ஓங்கலை - உயர்ந்தோங்கிய கயிலை மலையை; ஓங்கிய ஈசனோடும்- அதன் உச்சியில் வீற்றிருக்கும் சிவபெருமானோடும்; ஊசி வேரொடும்- அம் மலையின் ஆணிவேரோடும்; எடுத்ததும் இல்லையோ?- (நம் தலைவன்) இராவணன் எடுத்துள்ளதும் உன் நினைவுக்கு வரவில்லையோ? (என்றான் படைத் தலைவன்). |
ஓங்கல் - மலை. ஊசி - வேர், ஆணிவேர். இராவணன் கயிலை எடுத்தது முன்பும் (2832, 2840, 3360) பல இடங்களில் புகழப்படும். வானரங்கள் எடுத்தவை குன்றுகள்; நம் வேந்தன் எடுத்தது ஈசனோடு சேர்ந்த மலைகட்குத் தலைவனாகிய மலையரசனை!; மறந்ததும் எப்படியோ என வியந்துரைக்கின்றான். |
(51) |
6797. | 'அது கொடு என் சில? ஆர் அமர் மேல் இனி, |
| மதி கெடுந் தகையோர், வந்து நாம் உறை |
| பதி புகுந்தனர்; தம்மைப் படுப்பது ஓர் |
| விதி கொடு உந்த விளைந்ததுதான்' என்றான். |
| |
அது கொடு என் சில- 'பகைவர்கள் குன்றுகளை வீசிக் கடலை யடைத்து இலங்கையையடைந்தனர் எனும்) அச் செய்தியைக் கேட்டு நாம் (அஞ்ச) என்ன உள்ளது?; |