ஒற்றர் உரைத்தல் |
6803. | 'அடியம் அந் நெடுஞ் சேனையை ஆசையால் |
| முடிய நோக்கலுற்றேம்; முது வேலையின் |
| படியை நோக்கி, எப் பாலும் படர்குறும் |
| கடிய வேகக் கலுழனின் கண்டிலம் |
| |
அடியம்- (உன்) அடியேம் ஆகிய நாங்கள்; அந் நெடுஞ்சேனையை - அந்த நீண்ட (குரங்குச்) சேனையை; ஆசையால்- (மனங்கொண்ட) விருப்பத்தால்; முடிய நோக்கல் உற்றோம் - முழுவதும் நோக்கத் தொடங்கினோம்; முதுவேலையின் படியை நோக்கி - பழமையான கடலின் எல்லையைக் காணுமாறு; எப்பாலும் படர்குறும் - எல்லாப் பக்கங்களிலும் பார்த்தல் பொருந்திய; கடிய வேகக் கலுழனின் - கடுமையான வேகம் பொருந்திய கருடனைப் போன்று;கண்டிலம் - காண இயலாதவர்கள் ஆனோம். |
(58) |
6804. | 'நுவல, யாம் வர வேண்டிய நோக்கதோ? |
| கவலை-வேலை எனும், கரை காண்கிலாது |
| அவலம் எய்தி அடைத்துழி, ஆர்த்து எழும் |
| துவலையே வந்து சொல்லியது இல்லையோ? |
| |
நுவல யாம் வரவேண்டிய நோக்கதோ?- பகைப்படையின் அளவு ஆற்றல் முதலியவற்றை நாங்கள் வந்து உமக்கு உணர்த்த வேண்டிய தேவையுமுள்ளதோ? கவலை, வேலை எனும் கரை- ; (அவ்வானர வீரர்கள்) கவலைக்கடலின் கரையினைக் காண்கிலாது- காண இயலாது;அவலம் எய்தி- துயரம் முழுவதும் அடைந்து; அடைத்துழி - (இறுதியில் வழி கண்டு) கடலை அடைத்தபோது; ஆர்த்து எழும் துவலையே - (மலைகள் வீழ்ந்ததனால் இலங்கையில்) ஆர்ப்பரித்த துளிகளே; வந்து சொல்லியது இல்லையோ? - (அவர்கள் ஆற்றலை) (உமக்கு) வந்து சொல்லிவிட்டது இல்லையோ? |
(59) |
6805. | ' "எல்லை நோக்கவும் எய்திலதாம்" எனும் |
| சொல்லை நோக்கிய மானுடன், தோள் எனும் |
| கல்லை நோக்கி, கணைகளை நோக்கி, தன் |
| வில்லை நோக்கவும், வெந்தது வேலையே. |