பக்கம் எண் :

476யுத்த காண்டம் 

எல்லை நோக்கவும் - (இராமன் தன்)  எல்லையிலே வந்து
தன்னை நோக்கி வரம் கிடக்கவும்; எய்திலதாம் எனும் - (கடல்)
வந்து உதவவில்லை என்கின்ற; சொல்லை நோக்கிய மானுடன்
- (பழி) மொழியைக் கருதிய (இராமன் ஆகிய)  மானுடன்; தோள்
எனும்   கல்லை   நோக்கி 
-   தனது  தோள்கள் என்னும் 
மலைகளைப்  பார்த்து;  கணைகளை  நோக்கி  -  (அம்பறாத்
தூணியில்   உள்ள)   அம்புகளைப்   பார்த்து;  தன்  வில்லை
நோக்கவும்
- தன்னுடைய (தோளிற் கிடந்த) வில்லினை நோக்கிய
அளவில்; வேலை வெந்தது - கடல் எரிந்தது.
 

மதியாது  கிடந்த கடலின் மேல் வெகுளாது போயின் உலகு
பழிக்கும்;   அடைக்கல  தருமம்  ஆபத்தைச்  சந்திக்கும், என
வெகுண்டான்.   ஆதலின்   "எல்லை  நோக்கியும் எய்திலதாம்"
எனும்  சொல்லை  நோக்கிய  மானுடன்" என்றார். கல் - மலை.
பெருமைக்கும்   உயர்வுக்கும்   வன்மைக்கும்  ஏற்ற  உருவகம்.
இந்தத்  தோளும்,  அம்பும், வில்லும்  நோக்கி   முடிப்பதற்குள்
கடல், வெந்து  முடிந்திருந்தது  என்பார். "நோக்கவும்  வெந்தது
வேலையே" என்றார். விரைவுயர்வு நவிற்சியணி யென்பர்.
 

 (60)
 

6806.

'தார் உலாம் மணி மார்ப ! நின் தம்பியே,

தேர் உலாவு கதிரும், திருந்து தன்

பேர் உலாவும் அளவினும், பெற்றனன், 

நீர் உலாவும் இலங்கை நெடுந் திரு.
 

தார்   உலாம்   மணிமார்ப!  -   மாலைகள்   அசையும்
மணிமார்பினையுடைய   மன்னனே!   தேர்  உலாவு கதிரும் -
தேரிலே  உலாவுகின்ற சூரியன்  (சஞ்சரிக்கும் அளவும்); திருந்து
தன் பேரும் உலாவு அளவினும்
- செம்மையான தன் பெயரான
இராம நாமம் உலகில் வழங்கும் காலம்  வரையும்; நீர் உலாவும்
இலங்கை நெடுந் திரு
- கடல் நீர் சூழ்ந்த இலங்கை மாநகரத்துப்
பெருஞ்செல்வம்   முழுவதும்;   நின்  தம்பியே பெற்றனன்
உன்னுடைய  தம்பியாகிய  வீடணனே (இராமனால்)   கொடுக்கப் 
பெற்றனன்.
 

பேர்  உலாவும்  என்ற தொடரில் உம்மையை இடம் மாற்றிப்
'பேரும்  உலாவு'  எனக்  கொள்க,  தேர்  உலாவு  கதிரும் தன்
பேரும் என்பன  எண்ணும்மைகள். மேலும் வீடணன்  அரசுரிமை
பெற்றான் என்பதை  இராவணனுக்கு அறிவிக்குமாறு இராமபிரான்
சொன்னதையும் நினைக.
 

 (61)