6809. | 'பற்றி, வானர வீரர் பனைக் கையால், |
| எற்றி எங்களை, ஏண் நெடுந் தோள் இறச் |
| சுற்றி, ஈர்த்து அலைத்து, சுடர்போல் ஒளிர் |
| வெற்றி வீரற்குக் காட்டி, விளம்பினான். |
| |
வானர வீரர்- குரங்கின வீரர்கள் உதவியால்; எங்களைப் பனைக்கையால் பற்றி - எங்கள் இருவரையும் பனை மரம் போன்ற கரங்களால் பற்றி; ஏண் நெடுந்தோள் இறச்சுற்றி- பெரிய நீண்ட தோள்கள் முறியுமாறு சுற்றி; ஈர்த்து அலைத்து - இழுத்துச் சுழல விட்டு; சுடர் போல் ஒளிர் வெற்றி வீரற்குக்காட்டி- சூரியன் போல் ஒளிர்கின்ற விசய ராகவனுக்கு எங்களைக் கொண்டு போய்க்காண்பித்து; விளம்பினான் - (நாங்கள் யார் என்று) வீடணன் கூறினான். |
பனை - கைகளின் பருமைக்கும் உரத்துக்கும் உவமை. |
(64) |
6810. | ' "சரங்கள் இங்கு இவற்றால் பண்டு தானுடை |
| வரங்கள் சிந்துவென்" என்றனன்; மற்று எமைக் |
| குரங்கு அலாமை தெரிந்தும், அக் கொற்றவன் |
| | இரங்க, உய்ந்தனம்; ஈது எங்கள் ஒற்று' என்றார். |
| |
அக்கொற்றவன் - அந்த வெற்றி வீரனாகிய இராமன்; இங்கு சரங்கள் இவற்றால் - இங்குள்ள இந்த அம்புகளினால்; தான் பண்டு உடை வரங்கள் சிந்துவென் என்றனன்- முன்பு இராவணன் பெற்றுள்ள வரங்களையெல்லாம் அழிப்பேன் என்று எம்மிடம் கூறினான்; மற்று - மேலும்; எமை குரங்கு அலாமை தெரிந்தும் - நாங்கள் ஏமாற்றக் குரங்கு வேடம் கொண்டோர் உண்மையில் குரங்குகள் அல்லோம் என்பது தெரிந்தும்; இரங்க உய்ந்தனம்- எங்கள்பால் இராமன் காட்டிய கருணையினால் பிழைத்து வந்தோம்;ஈது எங்கள் ஒற்று என்றார் - இதுவே நாங்கள் ஒற்றறிந்து வந்தது என்று சொன்னார். |
தாம் உயிர் பிழைக்கவிட்ட இராமனின் கருணைப் பெருக்கை மறவாமல் அவன் எதிரிமுன் உரைக்கும் மாண்பினைப் போற்றலாம். முன்பு சீதை கூறிய சொற்கள் (5188, 5189) இங்கு நினைக்கத்தகும். |
(65) |
6811. | மற்றும் யாவையும், வாய்மைய வானவன் |
| சொற்ற யாவையும் சோர்வு இன்றிச் சொல்லினார்; |