பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 479

'குற்றம் யாவையும் கோளொடு நீங்குக !
இற்றை நாள் முதல் ஆயு உண்டாக !' என்றார்.
 

மற்றும்  யாவையும் -  அங்கு  நடந்த  பிற   செய்திகள்
யாவற்றையும்;   வாய்மைய   வானவன்- உண்மையையுடைய
தேவனாகிய இராமபிரான்; சொற்ற யாவையும் - (இராவணனிடம்
சொல்க   எனச்)   சொல்லிய   யாவற்றையும்; சோர்வின்றிச்
சொல்லினார் - மறவாமல்  சொன்னார்கள்  ஒற்றர்கள்; இற்றை
நாள் முதல்
- மேலும், இன்றைய  நாள் தொடங்கி; கோளொடு
குற்றம் யாவையும்  நீங்குக
- தீமையோடு  கூடிய குற்றங்கள்
யாவையும் உன்னிடமிருந்து  நீங்குவன ஆகுக! ஆயுஉண்டாக
என்றார்
- உன் வாழ்நாள் வளர்வதாகுக என்று வாழ்த்தினர்.
 

சோர்வு -மறதி. தளர்ச்சியுமாம். இராமன்  வெகுளும் அளவு
தீமை  புரிந்துள்ளான்  என  உணர்ந்த ஒற்றர்கள், இன்று முதல்
அக்குற்றங்கள் நீங்குக என்று குறிப்பாக உணர்த்தினர். கோள் -
கொள்ளுதல்.   இராவணன்   அழிவனோ   என்ற  அச்சத்தால்
அவனை ஒற்றர் வாழ்த்தியதைப் பாண்டியனின் வாயில் காவலன்
பலமுறை வாழ்த்திய சிலப்பதிகாரச் செய்தியோடு ஒப்பிட்டுணர்க. 
 

(66)
 

சேனை காவலன் உரை
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

6812.

' "வைதெனக் கொல்லும் விற் கைமானிடர், மகர

நீரை

நொய்தினின் அடைத்து, மானத் தானையான்

 நுவன்ற நம் ஊர்

எய்தினர்" என்ற போதின் வேறு இனி எண்ண 

வேண்டும்

செய் திறன் உண்டோ?' என்னச் சேனை

காப்பாளன் செப்பும்:

  

வைது எனக் கொல்லும் - பெரியோர் இட்ட சாபம் போல்
(தப்பாமல் உடனே) கொல்லவல்ல; விற்கை மானிடர்- வில்லைக்
கையில் ஏந்திய மனிதர்கள்; மகர நீரை- மகர மீன்கள் உலாவும்
கடல்  நீரை;  நொய்தினின்  அடைத்து- எளிதாக அடைத்து;
மானத் தானையான்- வீரமிக்க  படையோடு; நுவன்ற நம்மூர்
எய்தினர்
-