பகைவர்களான) தேவர்கள் இகழ்ந்து பேசுவர்;பற்றி- அவ்வாறு விடாமல்; இப்பகையைத் தீர - இப்பகைமையைத் தீர்த்துக் கொள்ள; போரின் - போரில்; ஒட்டலாம்- சமாதானமும் செய்து கொள்ளலாம்; (ஆனால்) ஒன்னார் ஒட்டினும் - அதற்குப் பகைவர்கள் உட்பட்டாலும்; உம்பி ஒட்டான் - உன் தம்பியாகிய வீடணன் உடன்படான்; கிட்டிய போது- போர் நெருங்கி வந்துவிட்ட இந்தப் பொழுதில்;செய்வது என் - நாம் செய்யத்தக்கது என்ன (என்று); இனிக் கிளத்தல் வேண்டும் - (வேந்தனாகிய நீயே) எங்கட்கு இனி ஆணையிடல் வேண்டும். |
(68) |
| 6814. | 'ஆண்டுச் சென்று, அரிகளோடும் மனிதரை அமரில் |
| கொன்று, |
| மீண்டு, நம் இருக்கை சேர்தும் என்பது |
| மேற்கொண்டேமேல், |
| ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது, உறுதி, |
| உண்டோ? |
| வேண்டியது எய்தப் பெற்றால், வெற்றியின் விழுமிது |
| அன்றோ? |
| |
ஆண்டு சென்று - பகைவர் இருக்கும் இடத்திற்கே சென்று; அரிகளோடும் மனிதரை - வானரப்படைகளோடு அம்மானிடர் இருவரையும்; அமரில் கொன்று - போர் செய்து கொன்று; மீண்டு நம் இருக்கை சேர்தும்- மீளவும் நம் இருப்பிடம் சேர்வோம்;என்பது மேற்கொண்டேமேல்- என்று முன்பு முடிவு மேற்கொண்டோமெனின்; ஈண்டு வந்து இறுத்தார் - (இன்று, அப்பகைவர்களே) இங்கு நம்மை நோக்கி வந்தடைந்தார்; என்னும் ஈது அலால் உறுதியுண்டோ?- என்கின்ற இச்செய்தி யல்லால் நமக்கு இப்போது உறுதி தரும் செய்தி உண்டோ? வேண்டியது எய்தப் பெற்றால்- (நாம் வேண்டியது இதுவேயாம்) நாம் விரும்பியதே கிடைக்கப் பெற்றோம். என்றால்; (அது) வெற்றியின் விழுமிது அன்றோ? - நாம் இனிப் பெறவிருக்கும் வெற்றியிலும் சிறந்தது அன்றோ? |
பகைவர் இருக்குமிடம் நோக்கிச் சென்று தாக்குதல் நடத்திக் கொல்வோம் என்று முன்பு இராவணன் மந்திரப் படலத்தில் (27, 37, 41) |