பக்கம் எண் :

484யுத்த காண்டம் 

'விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும்,

மீண்டு

செது நெறி நிலையினாரே' என்பது தெரியச்

சொல்லும்:

 

மதி  நெறி  அறிவு  சான்ற  மாலியவான் - யாவராலும்
மதிக்கத்தக்க அறநெறியிற் செல்லும் அறிவு நிறைந்த மாலியவான்;
நல்வாய்மை- சிறந்த சத்திய வாசுங்கள்; பொது நெறி நிலையது
- உலகிற்குப் பொதுப்படக் கூறியுள்ளவை; ஆகப் புணர்த்துதல்
புலமைத்து
-  (ஆனாலும்)  (அவற்றை) தம் வாழ்விற்கேற்குமாறு
கூட்டிப் பயன்கொள்ளுதலே அறிவுடைய வழி; என்னா - என்று
எண்ணி; விதி நெறி நிலையது- விதிவழியால் பகைவர்கள் அழிய
எதிர் நிற்பது; ஆக விளம்புகின்றோரும்- என்று விளம்புகின்ற
பிரகத்தன் முதலியோரும்; ஈண்டுச் செது நெறி நிலையினோரே
என்பது தெரியச் சொல்லும்
- இங்கு அழியும் நெறியில் (செல்ல)
நிற்பவரே  என்பதனை (இராவணனுக்கு)  விளங்குமாறு  சொல்லத்
தொடங்குவான்.
  

சேற்றிற்  பிறந்த  செந்தாமரை போன்று, இலங்கையில் அறம்
உரைக்கும்  திறம்   வாய்ந்தவன்   என   மதிக்கத்தக்க  அறிவு
சான்றவன்  ஆதலின்,  "மதி  நெறி  அறிவு  சான்ற மாலியவான்"
என்றார். ஆகப்  புணர்த்துதல் -  நமக்கு'   ஆகுமாறு  கூட்டிக்
கொள்ளுதல்.   புலமைத்து   -   அறிவின் பாலது. செதுத்தல் - 
சிதைவுறல், அழிதல், செத்தை என்பதும் காண்க.   

(72)
 

6818.

' "பூசற்கு முயன்று நம்பால், பொரு திரைப் புணரி

வேலித்

தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக, 

 

மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில்

தோன்றும்

 

ஈசற்கும் ஈசன் வந்தான்" என்பதோர் வார்த்தை

இட்டார்.

 

மாசு அற்ற சோதி வெள்ளத்து- களங்கம் அற்ற தூய ஒளி
வெள்ளத்தின்; உச்சியின்  வரம்பில்  தோன்றும்-  பரம பதம்
எனும்    பெருவெளியின்  எல்லையில்  காட்சிப்   படுபவனாகிய;
ஈசற்கும் ஈசன்-  தெய்வத்திற்கெல்லாம் தெய்வமாகிய முழுமுதற்
கடவுளே; பொருதிரைப்  புணரிவேலி  -  தரையினை  ஓயாது
தாக்குகின்ற