பக்கம் எண் :

486யுத்த காண்டம் 

பரத்துவம்     என்று    சிறப்பித்துச்      சொல்லும்    அந்த
உயர்கதியிருந்து  நீங்கி;  நவையிலா   உயிர்கள்  -  குற்றமற்ற
உயிர்கள்   யாவற்றின்  உள்ளும்;  தொல்  நிலை  பிரிந்தான்
என்ன 
-  தனது   பழமையான    பரத்துவ    நிலையிலிருந்து
மாறுபட்டுவிட்டான் என்று; பலவகை நின்றதூ யோன்- கூறுமாறு
பல்வேறு   வகையாக   அவதரித்து  நின்ற  தூய்மை மாறாதவன்
(ஆகிய   பரம்பொருளின்);   இன் அணை  என்ன -  இனிய
படுக்கையாகிய  (ஆதி  சேடன்  என்று);  யாரும் இயம்புவர் -
எல்லோரும் கூறுவர்; ஏது யாதோ?- இதன் காரணம் என்னவோ?
 

இறைவனின்  ஐந்து   நிலைகளுள்  பரம்,  வியூகம், விபவம்
(அவதாரம்), அந்தர்யாமித்துவம், அர்ச்சை என ஓதப்படுமவற்றுள்
முதல் நிலை பரத்துவம் ஆதலின், "அருமறை பரம் என்று ஓதும் 
நன்னிலை"  என்றார்.  வினையின்  "நீங்கி  விளங்கிய அறிவின்
முனைவன்"  (தொல். மரபி. 83)  இறைவன்  ஆதலின்,  அவன்
எத்தகைய  பிறவியெடுப்பினும்    அப்பிறவிக்குரிய    மாசுகள்
அவனைப் பற்றா; ஆனால், உலகினரின் கண்ணுக்கு அவ்வாற்றல்
புலப்படாது போய்,  கன்ம வயப்பட்டவன் போல் தோன்றுவன்
என்பது  தோன்ற, "தொன்னிலை  பிரிந்தான்  என்ன  உயிர்கள்
தோறும்  பலவகை  நின்ற  தூயோன்"  என்றார். "தொன்னிலை
பிரிந்தான் என்ன நின்ற தூயோன்" என்பதனாலேயே தொல்நிலை
பிரியாமை   பெறப்பட்டது.    ஆத்மாவிற்கு   இன்பதுன்பங்கள்
இல்லாமல் இருக்கவும், இச்சரீரத்தினுடைய சேர்க்கையால் அவை
உண்டாகின்றன. அப்படி இறைவனுக்கும் இச்சரீரச் சேர்க்கையால்
இன்பதுன்பங்கள்   கூடாவோ  எனின் கூடா. அதற்குக் காரணம்
உட்புகுவதற்கு உளதாய காரண விசேடம். ஆத்மா கர்மமடியாகப்
பிரவேசிக்கின்றது. இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் 
பிரவேசிக்கின்றான். சிறைக்கூடத்தில் சிறையனும் கிடந்தான்; அரச
குமாரனும் கிடந்தான்;சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே
துக்கத்திற்கு     ஏதுவாயிற்று;   அரசகுமாரன்    இச்சையாலே
பிரவேசிக்கையாலே  போகரூபமாய்  இருந்தது" (திருவாய் ஈடு. 3:
4: 10;) எனும் நம்பிள்ளையின் அரிய உரை இங்கு கருதத்தக்கது.
 

 (74)
  

6820. 

' "அவ்வவர்க்கு அமைந்த வில்லும், குல வரை

அவற்றின் ஆன்ற

 

வெவ் வலி வேறு வாங்கி, விரிஞ்சனே விதித்த,

மேல்நாள்;

 

செவ் வழி நாணும், சேடன்; தெரி கணை ஆகச்

செய்த

 

கவ்வு அயில், கால நேமிக் கணக்கையும் கடந்தது"

என்பார்.