போன்ற தூதனாகிய அநுமனை; காற்றெனும் கடவுள் என்றார்- காற்றுக் கடவுள் ஆகிய வாயு தேவனே என்றார்கள்; மேலும் ஒன்று உரைத்தார் - (அவனைக் குறித்து) மேலும் ஒன்று சொன்னார்கள்; அன்னான் இனிமேல் விரிஞ்சன்ஆம் என்றார் - அவ்வனுமன் இனிவரும் பிறப்பில் பிரமதேவன் ஆவான் என்றும் சொன்னார்கள். |
(76) |
6822. | ' "அப் பதம் அவனுக்கு ஈந்தான், அரக்கர் |
| வேர் அறுப்பதாக |
| இப் பதி எய்தினான் அவ் இராமன்" என்று எவரும் |
| சொன்னார்; |
| ஒப்பினால் உரைக்கின்றாரோ? உண்மையை |
| உணர்த்தினாரோ? |
| செப்பி என்? "குரங்காய் வந்தார் தனித் தனி |
| தேவர்" என்றார். |
| |
அப்பதம் - அந்தப் பிரம பதவியை; அவனுக்கு ஈந்தான் அவ் இராமன் - அந்த அநுமனுக்குத் தந்தவன் ஆகிய இராமபிரான்; ரக்கர் வேர் அறுப்பதாக - அரக்கர்களை வேரொடு அழிப்பதற்காக; இப்பதி எய்தினான் - இந்த இலங்கையை (இப்போது) அடைந்துள்ளான்; என்று எவரும் சொன்னார் - என்று எல்லோரும் இயம்புகின்றனர்; ஒப்பினால் உரைக்கின்றாரோ?- அவ்வாறு அவர்கள், வெறும் ஒப்புக்காக உரைக்கின்றார்களோ? உண்மையே உணர்த்தினாரோ? - அன்றி, உண்மையைத் தான் உணர்த்துகின்றார்களோ? குரங்காய் வந்தார் - வானரங்களாக வடிவெடுத்து வந்தவர்கள்; தனித்தனி தேவர் என்றார் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவர்கள் என்கின்றார்கள்; செப்பி என்? - (இவற்றையெல்லாம்) (இப்போது) சொல்லி என்ன பயன்? |
"விரிஞ்சனாம் இனிமேல்" என மேற்பாடலில் குறித்த பிரமபதத்தை, "அப்பதம்" என்று அநுவதித்தார்; பிரமபதம் இராமனால் அளிக்கப்படும் என்பதனை, உத்தர காண்ட அநுமப் படலத்தில் பிரமனும் உரைப்பான்: |
"வன்னிய சகாய நின்மைந்தன் வையத்தோர்க்கும் |
வானோர்க்கும் |
இன்னல் செய்யும் இராவணன்தன் இலங்கை நகரை |
எரியூட்டி, |
மன்னன் இராமன் மனம் உவப்ப வயவாள்அரக்கர் |
குலம் அறுத்துப் |
பின்னை அவன்தன் பேர்அருளால் பிரமபதமும் |
பெறும் என்றான்" |
(உத்தர. அநுமப் : 40) |