பக்கம் எண் :

536யுத்த காண்டம் 

சினம் கொள் திண்திறல் அரக்கனும்- (சாரன் இவ்வாறு
புகழ்ந்ததைக் கேட்டு) சினம் கொண்ட பேர் ஆற்றல்  வாய்ந்த
இராவணனும்; சிறு நகை செய்தான்- புன்முறுவல் பூத்தவனாய்
(அச்சாரனை    நோக்கி);    புனம்    கொள்   புன்தலைக்
குரங்கினைப் புகழுதி போலாம்
- கொல்லைகளில்  அலைந்து
திரிகின்ற    சிறிய    தலையினைக்   கொண்ட குரங்குகளைப்
புகழ்கின்றாய்   போலும்!  வனங்களும் படர் வரைதொறும்-
வனங்களோடு   கூடியுள்ள  மலைகள்   தோறும்;  திரிதரும்-
திரிகின்ற;    மானின் பல இனங்களும் - மான்களின் பற்பல
வகைக்  கூட்டங்களும்   (சேர்ந்து    எதிர்த்தால்); அரியினை
என்   செயும்
  -  ஒரு சிங்கத்தை என்ன செய்துவிடமுடியும்?
என்றான்...
- என்று (ஏளனமாய்க்) கூறினான்.
 

இராவணனுக்கு     இப்போதெழுந்த    சிறுநகை, எள்ளல்
அடியாகப் பிறந்தது. போலாம்-ஒப்பில் போலி.
 

(35)