அகழியில் போர் |
| 6908. | திரித்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி, |
| பெருத்து உயர் தடக் கைகொடு அடுத்து இடை |
| பிடித்து, |
| கருத்து அழிவுற,--திரி திறத்து எயில், கணத்து |
| அன்று |
| எரித்தவனை ஒத்தவன்,--எடுத்து அகழி இட்டான். |
| |
எயில் கணத்து எரித்தவனை ஒத்தவன்- (முன்பு) திரிபுர மதில்களை கணப்பொழுதில் எரித்தவனான சிவபெருமானைப் போன்ற சுக்கிரீவன்; திரித்தவன் உரத்தின் - தன்னை (அவ்வாறு) சுழற்றியவனாகிய இராவணனுடைய மார்பில்; உகிர் செற்றும் வகை குத்தி- நகங்கள் பதியுமாறு அழுந்தக் குத்தி; பெருத்து உயர் தடக்கை கொடு - பருத்து நீண்ட தன் தன் பெருங்கைகளைக் கொண்டு; அடுத்து இடை பிடித்து - (இராவணனை) நெருங்கி, அவன் இடுப்பைப் பற்றி; திரி திறந்து- சுழற்றுகின்ற வலிமையால்; கருத்து அழிவுற- (இராவணன்) மூர்ச்சையடைய; எடுத்து அகழி இட்டான் -(அவனைத்) தூக்கி அகழியில் வீசினான். |
(14) |
| 6909. | இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான், |
| தட்ட உயரத்தினில் உறும் தசமுகத்தான்; |
| ஒட்ட உடனே அவனும் வந்து, அவனை உற்றான்; |
| விட்டிலர் புரண்டு இருவர், ஓர் அகழின் வீழ்ந்தார். |
| |
தட்ட- சுக்கிரீவன் (ஓடிவிடாமல்) தடுக்கும் பொருட்டு; உயரத்தினில் உறும் தசமுகத்தான்- (அகழியிலிருந்து) உயரே ஏறிவந்துவிட்ட இராவணன்; இட்டவனை- தன்னை அகழியில் வீழ்த்திய சுக்கிரீவனை; இட்ட அகழில் - அவன் வீழ்த்திய அதே அகழியில்; கடிதின் இட்டான்- விரைவில் தள்ளினான்; ஒட்ட உடனே அவனும் வந்து- மீண்டும் அவனைத் தாக்கச் சுக்கிரீவனும் மேலே வந்து; அவனை உற்றான் - இராவணனை நெருங்கினான்; இருவர் விட்டிலர்- இருவரும் ஒருவரை ஒருவர் விடாமல்; புரண்டு ஓர் அகழின் வீழ்ந்தார்- (கட்டிப்) புரண்டு, (மீண்டும்) ஓர் அகழியில் வீழ்ந்தனர். |
இட்டவன்-சுக்கிரீவன். |
(15) |