பக்கம் எண் :

568யுத்த காண்டம் 

மலைக்குப்   பின்புறமாக: மறையப் போனான்- மறைவதற்குச்
சென்று விட்டான்.
 

சூரியன்   மறைவு-தற்குறிப்பேற்ற அணி. ஒன்று   ஒழித்து
ஒன்றாதல்-இன்றும்    வழங்கும்    மரபுத்   தொடர். "கோள்
இரண்டையும் கொடுஞ்சிறை வைத்த அக்குமரன்" (கம்ப. 6568)
என முன்பே  சூரிய  சந்திரர் சிறைப்பட்டுள்ளதனால் சூரியன்
அஞ்சி மறைந்தான். 
  

(49)
 

இராமனும் இராவணனும் தத்தம் இருக்கை சேர்தல்
 

6944.

கங்குல் வந்து இறுத்த காலை, கை விளக்கு எடுப்ப

காவல்

வெங் கழல் அரக்கன் மௌலிமிசை மணி விளக்கம் 

செய்ய,

செங் கதிர் மைந்தன் செய்த வென்றியை நிறையத்

தேக்கிப்

பொங்கிய தோளினானும், இழிந்து போய், இருக்கை

புக்கான்.

 

கங்குல் வந்து இறுத்த காலை-இரவு வந்து தங்கியபோது:
கை  விளக்கு    எடுப்பது  என்ன
- கை விளக்கு எடுப்பது
போன்று: வெம்கழல் அரக்கன்- கடிய வீரக்கழல்களையணிந்த
இராவணனுடைய: மௌலி மிசை மணி விளக்கம்   செய்ய-
மகுடத்தின்    மீது    பதித்திருந்த மணிகளே இருள் அகற்றும்
விளக்காக     ஒளிசெய்ய:     செங்கதிர்  மைந்தன் செய்த
வென்றியை
- சிவந்த கதிர்களையுடைய சூரியன்  மைந்தனாகிய
சுக்கிரீவன் விளைத்த வெற்றியை: நிறைய தேக்கி-மனத்துக்குள்
நிறைத்துக் கொண்டு:இழிந்து போய் - சுவேல  மலையிலிருந்து
இறங்கிச்    சென்று:    பொங்கிய  தோளினானும் - பூரித்த
தோள்கள்   உடையவனான  இராமனும்:இருக்கை` புக்கான் -
தன் பாசறை வீட்டையடைந்தான்.
 

(50)
 

6945.

என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை 

வேந்தன்,

நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம்

 நீள,