பக்கம் எண் :

580யுத்த காண்டம் 

'வேதனைக் காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது' 

என்னா,

 

மாதுலத் தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம்

சொன்னான்:

 

இவண்   நிகழ்ச்சி   ஈது  என்னா  - இங்கு நிகழும்
நிகழ்ச்சிகள்   இப்படி  (ஆயினவோ)  என்று; எரி விழித்து-
தீயென   விழித்து;இடியின்   நக்கு- இடி போன்று சிரித்து;
பூதலத்து    அடித்தகையன்  
-    தரையிலே   அடித்த
கைகளையுடையவனாய்;நிகும்பன் என்று ஒருவன் பொங்க-
நிகும்பன் என்னும்  பேருடைய    ஒப்பற்ற வீரன் வெகுண்டு
பொங்கிக்கூற;மாதுலத் தலைவன்  -  (அப்போது)     தாய்
மாமனாகிய மாலி என்னும்  தலைவன்;வேதனைக்  காமம்-
துயரம் மிகும் காமம் என்னும்  நோய்; அந்தோ வேரொடும்
கெடுத்தது
  - ஐயகோ! அடி  வேரொடும்    வீழ்த்துகிறதே!
என்னா
  -  என்று;   பின்னும்  அன்பின்  ஓர் மாற்றம்
சொன்னான் 
-   மீண்டும்,  அன்பினால்   ஒரு  வார்த்தை
கூறினான். 
 

(14)
 

6960.

'புக்கு எரி மடுத்து, இவ் ஊரைப் பொடி செய்து

போயினாற்குச்

சக்கரம் உண்டோ, கையில்? தசமுகன் தலைகள்

ஆன

இக் கிரி பத்தின் மௌலி இன மணி இடந்து 

கொண்ட

சுக்கிரீவற்கும் உண்டோ, சூலமும் வேலும் வாளும்?
 

புக்கு எரி மடுத்து- (இவ் இலங்கையுள்)  புகுந்த தீயூட்டி;
இவ்வூரைப் பொடி செய்து போயினாற்கு
- இந்த நகரத்தைத்
தூளாக்கிச் சென்ற அநுமானுக்கு; கையில் சக்கரம் உண்டோ?
-  கையில்  சக்கரம்  இருந்ததோ? தசமுகன் தலைகள் ஆன
இக்கிரி  பத்தின்
- பத்து முகமுடையவன் ஆன உன் தலைகள்
எனும் இந்த மலைகள்   மீது;   மௌலி  இனமணி  -  (உன்
தலைமீதிருந்த) மகுட  மணிகள் கூட்டத்தை;இடந்து கொண்ட-
பறித்துச் சென்ற;  சுக்கிரீவற்கும்  -   சுக்கிரீவனுக்கும்; சூலமும்
வேலும் வாளும் உண்டோ?
- சூலப் படையும், வேல் படையும்,
வாட்படையும் இருந்ததோ? (என்று வினவினான் மாலியவான்).
 

(15)