| அன்பு அழி சிந்தைதன்னால், அடாதன அறையல்' |
| என்றான், |
| பின் பழி எய்த நின்றான்; அவன் பின்னைப் பேச்சு |
| விட்டான். |
| |
என்புழி - என்று (மாலியவான்) சொன்னபோது; மாலி தன்னை எரி எழ நோக்கி- அவனை (விழிகளில்) தீ எழுமாறு பார்த்து; பின்பழி எய்த நின்றான் - பின்னால் (பெரும்) பழியடைய உள்ளவனான இராவணன்;என்பால் வன்பழி தருதி போலாம்- 'எனக்குக்கொடிய வசையை விளைவிப்பது (உன் கருத்துப்) போலும்; அன்பு அழி சிந்தை தன்னால் - என்பால் அன்பற்ற உன் மனத்தினால்; வரன் முறை அறியா அடாதன வார்த்தை - மரபு முறையறியாது கூறத்தகாத வார்த்தைகளைப்; அறையல் என்றான் - பேசாதே! என்று கூறினான்; அவன் - அது கேட்ட மாலியவான்; பின்னைப் பேச்சுவிட்டான்- அதன் பிறகு தன் பேச்சை நிறுத்திக் கொண்டான். |
சீதையை விடுத்து, இராமசேனையிடம் சரணடைவது கொடிய பழி என்பான் "வன்பழி" என்றான். "இடிப்பாரையில்லாத ஏமரா மன்னன். கெடுப்பார் இலானும் கெடும்" (திருக்: 448) என்பது உறுதியாதலின், "பின்பழியடைய நின்றான்" என்று இராவணனைக் குறித்தார். "செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்பு" (திருக்:389) அற்ற இராவணனுக்கு, மாலியவான் உரைத்த ஞானமொழிகள் "வரன் முறையறியா வார்த்தைகளாகவும் அடாதன அறைதல் ஆகவும்" தோன்றின. |
(17) |
இராவணன், சேனையை அணிவகுக்க ஆணையிடல் |
6963. | 'காட்டிய காலகேயர் கொழு நிணக் கற்றை காலத் |
| தீட்டிய படைக் கை வீரச் சேனையின் தலைவ! |
| தெள்ளி |
| ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் |
| கொண்டு, |
| கீட்டிசை வாயில் நிற்றி, நின் பெருங் |
| கிளையினோடும். |
| |
காட்டிய - (பிறகு இராவணன் படைத்தலைவன் பிரகத்தனை நோக்கி) (போரில் வீரம்) காட்டிய; கால கேயர் - காலகேயரின்; |