துன்பங்கள் (பல) செய்தான்;பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் - மண்ணுலகத் தேவர்களாகிய (செந்தண்மை பூண்ட) அந்தணர்கட்கு இன்னல் பல செய்தான்; மன்னுயிர் புடைத்துத் தின்றான்- நிலை பெற்ற உயிர்களைப் பிரித்துக் கொன்று (அவை வாழ்ந்த உடல்களைத்) தின்றான்; ஆசையின் அளவும் - திக்குகளின் எல்லை வரையிலும்; எல்லா உலகமும் - (இருக்கின்ற) எல்லா உலகங்களையும்;தானே ஆள்வான் - (பிறர் ஆள விடாதபடி) அவனே ஆண்டு வருகின்றான்;வாசவன் திருவும் கொண்டான்- இந்திர உலகத்துச் செல்வங்களையும் கொள்ளை கொண்டான்; வழியலா வழி மேற்செல்வான் - (இவை யாவற்றையும்விட) நெறியல்லாத நெறியிற் சென்று கொண்டுள்ளான். |
"இரக்கமது இழுக்கு" எனக் கூறிய தன் கருத்துக்குச் சான்று. இது முதல் நான்கு பாடல்களில் நிறுவுகின்றான் இலக்குவன். தேசி-கற்பின் ஒளிவடிவாகிய பெருமாட்டி சீதை. தேசு-ஒளி. தேசி என்பதற்கு சூரியன் எனவும் இந்திரன் எனவும் பொருள் உரைப்பர். தேவரை-உருபு மயக்கம். நான்காம் வேற்றுமைப் பொருளில் வந்தது. |
(4) |
6978. | 'வாழியாய்! நின்னை அன்று வரம்பு அறு துயரின் |
| வைக, |
| சூழ்வு இலா மாயம் செய்து, உன் துணைவியைப் |
| பிரிவுசூழ்ந்தான்; |
| ஏழைபால் இரக்கம் நோக்கி, ஒரு தனி இகல்மேல் |
| சென்ற, |
| ஊழி காண்கிற்கும் வாழ்நாள், உந்தையை உயிர் |
| பண்டு உண்டான். |
| |
வாழியாய்! - அழியா வாழ்வுடன் என்றும் வாழ்பவனே! அன்று - (இராவணன் சீதையைக் கவர்ந்த) அன்று; நின்னை வரம்பறு துயரின்வைக- எல்லையற்ற துன்பத்துள் நீ அழுந்துமாறு; சூழ்விலா மாயம் செய்து - (பிறரால்) எண்ணற்கும் இயலாத சூழ்ச்சியினைச் செய்து; உன் துணைவியைப் பிரிவு சூழ்ந்தான் - உன் வாழ்வின் துணைவியாகிய பிராட்டியைப் பிரித்தான்; ஏழை பால்- அந்தப் பேதையாகிய பிராட்டியினிடத்தே;இரக்கம் நோக்கி - (எழுந்த) சென்ற- தன்னந்தனியனாய் போர்க்குச் சென்ற; ஊழி காண்கிற்கும் வாழ்நாள் - பிரளயகாலத்தையும் |