பக்கம் எண் :

596யுத்த காண்டம் 

"இறந்து இது போதல் தீது" என்று இரங்கினை  

எனினும், எண்ணின்,

சிறந்தது போரே' என்றான்; சேவகன் முறுவல் 

செய்தான்.

 

அறந்தரு     தவத்தை ஆயும்  அறிவினால் - அறத்தை
விளைக்கின்ற  பொறுமையெனும் நெறியைக் கைக்கொள்ளும் உன்
புத்தியால்;  அவற்றை   முற்றும்  மறந்தனை - வீடணனுக்கும்
முனிவர்கட்கும்     கூறிய    உறுதிமொழிகளையும்   இராவணன்
இழைத்துள்ள தீங்குகளையும் முற்றும் மறந்து போனாய்! எனினும்-
என்றாலும்;மற்று- மேலும்;இவ் இலங்கையின் வளமை நோக்கி-
இந்த இலங்கை  மாநகரத்தின் வளங்களையெல்லாம் பார்த்து; இது
இறந்து போதல் தீது என்று இரங்கினை
- இந்த (அழகு) நகரம்
அழிந்து போவது நலமன்று என்று நினைத்து இரக்கம் கொண்டாய்;
எனினும் எண்ணின்
- என்றாலும் ஆராய்ந்து நோக்கின்; சிறந்தது
போரே   என்றான் 
-  (இராவணனிடம் இப்போது புரிதற்குரிய)
சிறந்த செயல் யுத்தமே என்றான் (இலக்குவன்) சேவகன் முறுவல்
செய்தான்
- (அது கேட்டுச்)   சிறந்தபெரு  வீரனாகிய இராமனும்
புன்னகை பூத்தான்.
 

இலக்குவன், பிராட்டியின் நலமும், அவள் கணவனாகிய  தன்
நலமும்    பேணுவதில் எத்தனை வேகமும் விழிப்பும் ஆர்வமும்
கொண்டுள்ளான்   எனும்  நினைவாலும், தூது தோற்கப்போகிறது;
நீ   விரும்பும்   போர்தான்   நிகழப்போகிறது;       ஆனாலும்
உலகுக்காகத்தான் தூது அனுப்பப்போகிறேன்" எனும் நினைவாலும்
இராமபிரான் புன்னகை பூத்தான் போலும். சேவகன்-பெருவீரன்.
 

(7)
 

இராமன் தூது விடுப்பது நீதி நூல் முறை
 

6981.

'அயர்த்திலென்; முடிவும் அஃதே; ஆயினும், அறிஞர் 

ஆய்ந்த

நயத் துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல்

நன்றோ?

புயத் துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி 

வாழ்தல்

சயத் துறை; அறனும் அஃதே' என்று இவை சமையச்

சொன்னான்.