அயர்த்திலென்- (இலக்குவனை நோக்கி) இராவ`ணன் தீமைகளையும், முனிவர் வீடணன் ஆகியோர்க்குத் தந்த வாய் மொழிகளையும் நான் மறக்கவில்லை;முடிவும் அஃதே-இறுதியில் நடக்கப் போவது போரேயாகும்;ஆயினும்- ஆனாலும்; அறிஞர் ஆய்ந்த - தேவகுருவான வியாழ பகவானும் அசுர குருவான சுக்கிராச்சாரியாரும் ஆராய்ந்து கூறியுள்ள;நயத்துறை நூலின்நீதி- அரசியல்துறை பற்றிய நூல்களின் நீதிகளை;நாம்- (போற்றிக்காக்க வேண்டிய) நாமே; துறந்து உறைதல் நன்றோ?-அவற்றை நீக்கி வாழ நினைத்தல் நன்றாமோ? புயத்துறை வலியரேனும்- தோளிலே உறையும் வலிமை மிக்காரே யானாலும்; பொறையொடும் பொருந்தி வாழ்தல்- பொறுமை பூண்டு வாழ்வதே;சயத்துறை- வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும்; அறனும் அஃதே - அரச நீதியும் அவ்வாறே கூறுகிறது; என்று இவை- என்று இத்தகைய மொழிகளை; சமையச் சொன்னான் - (இலக்குவன் மனத்தில்) பதியுமாறு இராமபிரான் கூறினான். |
"முடிவும் அஃதே" என்பது அரசநீதியின் முடிவாகிய தண்டம் எனும் போரைக்குறித்தது. வியாழபகவான் எழுதிய அரசநீதி நூல் பார்ஹச பத்தியம்; சுக்கிரர் எழுதியது சுக்கிர நீதி. ஆதி மனு வரைந்தது மனுநீதி சாத்திரம். இவையெல்லாம் நயத்துறை - நீதி நூல்கள். நயம் என்பது இங்கு நீதியைக் குறித்து, அதனைச் செயல்படுத்தும் அரச குலத்தைச் சுட்டி நின்றது. "புயத்து உறை வலியர்" என்பது தோள் வலிமை மிக்க பேரரசரைக் குறித்தது. தோள் வலிமையினும் பொறுமையே வலிது என்பது இராமனின் கருத்து. |
(8) |
அங்கதனைத் தூது செல்லுமாறு இராமன் பணித்தல் |
6982. | மாருதி இன்னம் செல்லின், மற்று இவன் அன்றி |
| வந்து |
| சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே; |
| ஆர், இனி ஏகத் தக்கார்? அங்கதன் அமையும்; |
| ஒன்னார் |
| வீரமே விளைப்பரேனும், தீது இன்றி மீள வல்லான்.' |
| |
மாருதி இன்னம் செல்லின்- முன்பு சென்று வந்த அனுமனே மீண்டும் சென்றால்; இவன் அன்றி மற்று - அநுமனாகிய இவனைத் தவிர வேறு (இங்கு); சாருநர் இல்லை என்பது சாரும் அன்றே?- வந்து போவார் (நம் படையில்) இல்லை என்ற கருத்து (நம் |