பக்கம் எண் :

598யுத்த காண்டம் 

பகைவரிடத்தில்) எழும் அன்றோ? "யார் இனி ஏகத்தக்கார்?"-
(இப்போது இராவணனிடம் தூதாகச்) செல்ல    வல்லவர் யார்?
அங்கதன் அமையும்
-  (என்று இராமன்  சிந்தித்து முடிவில்)
அங்கதனே      பொருத்தமானவன்;    ஒன்னார்    வீரமே
விளைப்பரேனும்
- பகைவர் வீரங்காட்ட அவனிடம் வந்தாரே
யாயினும்; தீதின்றி  மீள   வல்லான்  -  ஒரு   தீங்குமின்றி
மீண்டுவர வல்லவன் (என்று இராமன் கூறினான்)
  

"தீதின்றி    மீளவல்லன்    அங்கதன் ஆதலின் அங்கதன்
அமையும்"  என  முடிவுக்கு வந்தான். இதனால் தான். இப்பேறு
கிட்டியதை எண்ணி மகிழ்ந்த அங்கதன், "மாருதி யல்லன் ஆகில்
நீயெனும்   மாற்றம்    பெற்றேன்"   (6987)   என்று பூரித்தான்.
தத்திதாந்த நாமம்.
 

(9)
 

6983.

'நன்று' என, அவனைக் கூவி, 'நம்பி! நீ 

நண்ணலார்பால்

சென்று, இரண்டு உரையின் ஒன்றைச் செப்பினை

திரிதி' என்றான்;

அன்று அவன் அருளப் பெற்ற ஆண்தகை அலங்கல்

பொன் தோள்

குன்றினும் உயர்ந்ததுஎன்றால், மன நிலை

கூறலாமோ?

 

'நன்று'  என - சுக்கிரீவன், வீடணன் முதலியோர், 'நல்லது
நல்லது'  என்று  கூற; அவனைக் கூவி- அங்கதனை அழைத்து;
நம்பி!  நீ
- நற்குணங்கள்  அமைந்தவனே! நண்ணலார் பால்
சென்று
-  பகைவர் பால் சென்று;இரண்டு உரையின்  - நான்
கூறும்  இரண்டு  சொற்களைச்; செப்பினை- சொல்லி;ஒன்றைத்
திரிதி 
-   அவற்றுள்   அவன்    இசைந்த ஒன்றை (அறிந்து)
திரும்புவாயாக;  என்றான்... -   என்றான்; அன்று- அப்போது;
அவன்   அருளப்பெற்ற
  -  அந்த இராமனால் (பணி செய்ய)
அருளப்பெற்ற; ஆண்  தகை  -   (பேராளனாகிய) ஆண்மைப்
பண்புகள்   அனைத்தும்   அமையப்  பெற்றவனான அங்கதன்;
அலங்கல் பொன்தோள்
- மாலை புனைந்த அழகிய தோள்கள்;
குன்றினும்  உயர்ந்தது என்றால்
- குன்றுகளை விட  உயர்ந்து
ஓங்கின  என்றால்; மன  நிலை   கூறல் ஆமோ? -  அவன்
உள்ளத்து உவகை நிலையை உரைக்க முடியுமோ?
 

நம்பி-புருடோத்தமன்,   ஆண்தகை,  குணபூரணன் முதலிய
சொற்களின் பரியாயச் சொல். இராமபிரான் திருவாயால் 'நம்பி'