என்றும், 'நான் சொல்வதில் இரண்டில் ஒன்று தெரிந்து வா' என்றும் அன்பும் கட்டளையும் அமைய அறிவிக்கப்பெற்ற பெருமிதப் பேற்றால், அங்கதன் தோள்கள் குன்று போல் உயர்ந்தன. |
(10) |
6984. | 'என் அவற்கு உரைப்பது?' என்ன, |
| ' "ஏந்திழையாளை விட்டுத |
| தன் உயிர் பெறுதல் நன்றோ? அன்றுஎனின், |
| தலைகள் பத்தும் |
| சின்னபின்னங்கள் செய்ய, செருக்களம் சேர்தல் |
| நன்றோ? |
| சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக!" எனச் |
| சொல்லிடு' என்றான். |
| |
அவற்கு உரைப்பது என் என- (அங்கதன் இராமபிரானை நோக்கி) (அடியேன் சென்று) அந்த இராவணனுக்கு உரைக்க வேண்டியவை என்ன என்று விண்ணப்பிக்க;ஏந்திழையாளை விட்டு - உயர்ந்த அணிகளையணிந்த சீதா தேவியைச் சிறையிலிருந்து விடுதலை செய்து; தன் உயிர் பெறுதல் நன்றோ?- தன்னுடைய உயிரை (இழக்காமல்) பெறுதல் நல்லதா? அன்று எனில் - அல்லாது போனால்; தலைகள் பத்தும்- உன்னுடைய பத்துத் தலைகளும்; சின்ன பின்னங்கள் செய்ய- (என் அம்புகளினால்) கண்டதுண்டமாக்கப்பட்டு; செருக்களம் சேர்தல் நன்றோ? - போர்க்களத்தில் கிடப்பது நல்லதா? சொன்னவை- நான் கூறியவற்றுள்; இரண்டின் ஒன்றே துணிக- இரண்டில் ஒன்றையே தேர்ந்து சொல்லுக; எனச் சொல்லிடு - என்று இராவணனிடம் கூறிவருக என்றான். |
(11) |
6985. | 'அறத் துறை அன்று, வீரர்க்கு அழகும் அன்று, |
| ஆண்மை அன்று, |
| மறத் துறை அன்று, சேமம் மறைந்து உறைந்து |
| ஒதுங்கி வாழ்தல்; |
| நிறத்து உற வாளி கோத்து, நேர் வந்து |
| நிற்கும்ஆகின், |
| புறத்து உற எதிரே வந்து போர் தரப் புகல்தி' |
| என்றான். |