பக்கம் எண் :

600யுத்த காண்டம் 

சேமம்    மறைந்து    உறைந்து  ஒதுங்கி வாழ்தல் -
பாதுகாவலுக்காக (கோட்டைக்கு) உள்ளே மறைந்து தங்கி, ஒதுங்கி
வாழ்வது; அறத்துறை அன்று - தருமமாகாது;வீரர்க்கு அழகும்
அன்று
-   நல்லவீரர்க்கு  அழகும் ஆகாது;ஆண்மை அன்று-
தைரியத்தின் பாலும் சேராது; மறத்துறை அன்று- வீரத்துறையின்
பால்  படுவதும் அன்று; நிறத்து உற- மார்பிடத்தே தைக்குமாறு;
வாளி கோத்து
- அம்புகளைத் தொடுத்துக்கொண்டு; நேர் வந்து
நிற்குமாகில்
   -    எதிரே      எதிர்த்து     வந்து  நிற்கும்
வன்மையுளதென்றால்;புறத்து உற- இலங்கை நகரின் வெளியே
போந்து; எதிரே வந்து- நேருக்கு நேர் நின்று; போர்தரப்புகறி
- போர் புரியுமாறு புகல்வாயாக என்றான்.
 

(12)
 

அங்கதன் இராவணன் இருக்கையடைதல்
  

6986.

பார்மிசை வணங்கிச் சீயம் விண்மிசைப் 

படர்வதேபோல்,

வீரன் வெஞ் சிலையில் கோத்த அம்பு என, 

விசையின் போனான்,

' "மாருதி அல்லன்ஆகின், நீ" எனும் மாற்றம் 

பெற்றேன்;

யார் இனி என்னோடு ஒப்பார்? என்பதோர் இன்பம்

உற்றான்.

 

மாருதி அல்லன் ஆகின்  நீ- 'அநுமன் இல்லாவிட்டால்
(அந்த   இடத்தை    நிரப்புகிறவன்)    நீயே' எனும் மாற்றம்
பெற்றேன்
- என்று உரைக்கும் இராம வாக்கைப் பெற்றுவிட்டேன்;
இனி என்னோடு   ஒப்பார் யார்?
-  இனி எனக்கு நிகராவார்
உலகில் யாருளர்?என்பதோர்-என்று சொல்லவல்ல ஒப்பற்றதொரு;
இன்பம் பெற்றான்
-பேரின்பத்தினை யடைந்தவனான அங்கதன்;
பார் மிசை   வணங்கி
-  (இராமபிரானை)   மண்  மேல் (தன்
அங்கங்கள்  பட)    வீழ்ந்து  வணங்கி;   சீயம்  விண்மிசைப்
படர்வதே போல்
- சிங்கம்  (ஒன்று)   வான்  வழியே பாய்ந்து
செல்வது போல்; வீரன் வெஞ்சிலையில் கோத்த அம்பு என-
இராமபிரானின் கடிய   கோதண்டம்    எனும்  வில்லில் பூட்டிய
அம்புபோல்;   விசையிற்  போனான்  - விரைந்து (இராவணன்
இருப்பிடம் நோக்கிச்) சென்றான்.