பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 603

6989.

'கல் உண்டு; மரம் உண்டு; ஏழைக் கடல் ஒன்றும் 

கடந்தேம் என்னும்

சொல் உண்டே; இவனை வெல்லத் தோற்றும் ஓர்

கூற்றம் உண்டே?

எல்லுண்ட படை கைக் கொண்டால் எதிர் உண்டே? 

இராமன் கையில்

வில் உண்டேல், உண்டு' என்று எண்ணி, ஆற்றலை 

வியந்து நின்றான்.

 

கல்   உண்டு, மரம்  உண்டு - (இராவணன்  ஓலக்கத்தைக்
கண்ட   அங்கதன்  தனக்குள்)  கடலைத்  தூர்த்து அணைகட்டக்
கற்களும்  உண்டு,   மரங்களும்  உண்டு; (ஆதலால்)ஏழைக்கடல்
ஒன்று கடந்தோம்
- சிறிய இந்தக் கடல் ஒன்றைத் தாண்டி கடந்து
வந்து விட்டோம்; என்னும் சொல் உண்டே! - என்ற  சொல்லும்
(நமக்கு வாய்த்து)    விட்டது; இவனை வெல்ல- ஆனால், இந்த
இராவணனை    வெல்வதற்கு   (ஒருவன்) தோற்றும் ஓர் கூற்றம்
உண்டே.? 
-  பிறந்துள்ளதாகக்    கூறும்   ஒரு சொல் எழுந்தது
உண்டோ?    (இல்லை)   எல் உண்ட - ஒளியோடு கூடிய; படை
கைக்கொண்டால்
-   போர்க்கருவிகளை இவன்  கைகளில் ஏந்தி
(களத்திற்கு வந்தால்);எதிர் உண்டே? - எதிர்த்து நிற்கும் படையும்
(உலகில்) உண்டோ? இராமன் கையில் வில் உண்டேல் உண்டு!-
(நம் தலைவனான) இராமபிரானின்  கரங்களில் ஏந்திய (கோதண்டம்
எனும்) வில் உண்டு  என்றால்  இவனை எதிர்த்து நிற்கும் வாய்ப்பு
உண்டு! என்று எண்ணி -என்று எண்ணியவாறு;ஆற்றலை வியந்து
நின்றான்
- இராவணனது பேராற்றலை வியந்தபடி நின்றான்.
 

(16)
 

6990.

'இன்று இவன் தன்மை எய்த நோக்கினேற்கு  

எதிர்ந்த போரில்

வென்ற என் தாதை மார்பின் வில்லின்மேல் கணை 

ஒன்று ஏவிக்

கொன்றவன்தானே வந்தான் என்று உடன் குறிப்பின் 

அல்லால்,

ஒன்று இவன்தன்னைச் செய்ய வல்லரோ, உயிர்க்கு

நல்லார்?