பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 605

அரக்கனை;யாவர்  முடிப்பவர்  -  யாரே  அழிக்க வல்லார்?
பேழ்வாய்
- பிளந்த வாயினையுடைய; பணி பறித்து எழுந்த -
பாம்பின்   (மணியினைக்)   கவர்ந்து  கொண்டெழுந்த; மானக்
கலுழனின்
- பெருமைக்குரிய கருடனைப் போல; மணி பறித்து
எழுந்த
   -    இவனுடைய  மகுடத்தின் மணியைப் பறித்துக்
கொண்டுவந்த;  எந்தை- என்னுடைய தந்தையான சுக்கிரீவன்;
யாரினும்   வலியன்
-  எல்லோரிலும் வலியவனே! என்றான்
அங்கதன்.
 

"கூடல்    மகளிர் கோலம் கொள்ளும் ஆடகப் பைம்பூண்
அருவிலை  அழிப்பச்  செய்யாக் கோலமொடு வந்தீர்" (சிலம்பு.
16.9.11) என அணி அணியாக் கோலத்தோடு வந்த கண்ணகியின்
அழகினை   இளங்கோவடிகள் போற்றியமையை இங்கு நினைவு
கூர்தல் தகும். 
 

(18)
 

6992.

நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப  

எண்ணி,

கடுங் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும்

காட்டி,

விடும் சுடர் மகுடம் மின்ன, விரி கடல் இருந்தது 

அன்ன

கொடுந் தொழில் மடங்கல் அன்னான் எதிர் சென்று,  

குறுகி நின்றான்.

 

நெடுந்தகை  -  பெருங்குணங்கள் நிறைந்த இராமபிரான்;
விடுத்த தூதன் இனையன
- அனுப்பிய தூதனான அங்கதன்
இவ்வாறான  நினைவுகளை;நிரம்ப எண்ணி- நெஞ்சில் நிறைய
எண்ணியவனாய்;விரிகடல்  -  பரந்து  பட்ட கடல் ஆனது;
கடுங்கனல் 
- கொடிய தீயும்; விடமும்  கூற்றும் - நஞ்சும்
யமனும்;கலந்து- (ஆகிய மூன்றையும்) ஒன்றாகக்கூட்டி; கால்
கரமும்       காட்டி
  -    கால்களையும்    கைகளையும்
உண்டாக்கிக்கொண்டு;   சுடர்    விடும்   மகுடம் மின்ன
இருந்தது  என்ன
-  ஒளி உமிழ்கின்ற மகுடம் தன் உச்சியில்
மின்னுமாறு  அமர்ந்திருந்தது  என்று கூறுமாறு (அமர்ந்திருந்த);
கொடுந்தொழில்
-  கொடுமைத்  தொழிலையே கொண்டுள்ள;
மடங்கல்      அன்னான்
   -   சிங்கம்   போன்றவனான
இராவணனுக்கு;எதிர் சென்று - நேர் எதிராகப் போய்;குறுகி
நின்றான்
- இடைவெளி குறுகுமாறு அருகே நின்றான்.
 

இராவணன் தேற்றம்-இல்பொருள் உவமையணி.

(19)